Tuesday, December 30, 2008

நாம சொன்னா புஷ்சே ஆனாலும் கேட்டுக்கணும் ( மீள்பதிவு )

இது ஒரு நகைச்சுவை பதிவு தான் .யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இது ஒரு மீள்பதிவு. மஹிந்த ராஜபக்ஷ ஆகட்டும், புஷ் ஆகட்டும் இருக்குவரை மனித உரிமை என்பதற்கு விடிவே இல்லை.

இந்த புத்தாண்டு உலக நாடுகளில் அல்லல்கள் மறையவும், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள இடி அமீன்களிடமிருந்து மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவும் , இந்திய அரசின் இதயங்களில் ஈரம் சுரக்கவும் இறைவனை வேண்டிக்கொண்டு, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

...........................................................

தலைப்பைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறதா!!! நூறு சதவீதம் தமிழ்த்திரைப்படத்தலைப்பு தான்.
யார் யாரோ நடிக்கும்பொழது ஏன் நான் திரைக்கதை எழுதி இயக்கக்கூடாது என நினைத்தேன். உடனடியாக ஒரு தலைப்பைத்தேடி கண்டுப்பிடித்து சங்கத்தில் பதிவுச்செய்தேன்.எதற்கு என்றால் நம்ம ஆசாமிகள் உரிமை கொண்டக்கூடாது மட்டுமல்ல ஹாலிவுட் பசங்க என்னுடையது சொல்லக்கூடாது பாருங்க அதுதான்.இப்ப எல்லாம் மேலை நாட்டுப்பசங்க நம்முடைய மஞ்சள்,பாசுமதி அரிசி,யோகாசனத்தை அவங்க கண்டுப்பிடித்த மாதிரி பதிவுரிமை வாங்கிட்டு இருக்கிறார்கள்.நம்ம அரசாங்கம் தான் கோமாளி மாதிரி இருக்குது என்றால் நான் முட்டாள் ஆகி விடக்கூடாது பாருங்க அதுதான்.விளக்கம் வேண்டாம் விசியத்து வா என சொல்வது காதில் விழுகிறது. கதை கேக்கிறங்களா? அமெரிக்காரங்க எப்பொழதுமே அவங்க நினைத்த மாதிரியே செய்துட்டு இருக்கிறார்கள்.அது ஈரானாக இருந்தாலும் சரி, சதாம் உசேன் விசியம் ஆகட்டும், இல்லை ஆப்கான் போர் ஆனாலும் அவங்க சொன்னாக்கேட்டுக்கணும்.நம்ம சொன்னா யாரும் கேட்க மாட்டங்கனு தெரியும். சரி அதுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரைக்கும் ஊமையாகத்தான் இருக்கணும்.சரி என்ன தான் தீர்வு என்றால் அது திரைப்படம்தான். படம் எடுத்த மக்கள் பார்த்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அலைந்தேன். ஒரு தயாரிப்பாளாரும் கிடைத்து விட்டார் என்றால் பாருங்க.ஹீரோவா கிளிண்டன் தான் போடால் நல்லா இருக்கும் என பார்த்தால் அவரும் தேதி இல்லை, ரொம்ப பிசி என்று சொல்லி விட்டார். விசாரித்தில் அவரு படத்துக்கு விட பாப்பாகளுக்கு தான் தேதி கொடுக்கவே சரியாக இருக்கு என தெரிந்தது.அந்த வம்பு நமக்கு எதற்கு அப்பா, இப்பொழது பாப்புலரு யாருனு பார்த்த நம்ம புஷ்தான் முடிவுச்செய்திட்டு, கேட்டதுமே சரி என்று ஒத்துக்கிட்டார் என்றால் பாருங்க.எப்படியோ கதாநயாகியாக ஒரு கிராமத்து தேவதை தேர்வுச்செய்திட்டு படத்த ஆரம்பித்து விட்டேன். புஷ்சும் நல்லவே நடித்தார்,அவருக்குப்போய் நடிப்பு சொல்லித்தராணுமா!!! அவருந்தான் ஆயில் கிணறு மேலிருக்கின்ற ஆசையில் சதாம் தீவிரவாதத்திற்கு ஆதரவு தருக்கிறார் என்று ஈராக் கைப்பற்றியதுப்பொழது நடித்த நடிப்பை பார்த்தோம் என்று கூறுவது காதில் விழுகிறது. எப்படியோ படத்தை எடுத்துவிட்டேன்.ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி.படத்தை முழுவதும் இந்தியாவிலே எடுத்துவிட்டதால் நம்ம இயக்குநர்கள் போல் வெளிநாட்டை தயாரிப்பாளார் செலவில் பார்க்கணு ஆசையா இருந்தது.அந்த ஆசை நிறைவேற்று மாதிரி, நம்முட்டைய ஹீரோக்களுக்கு எப்படி ஐஸ்வர்யாவுடனோ,மல்லிகாவுடனோ ஒரு பாடலில் ஆடவில்லை என்றால் எப்படி உறக்கமே வராதோ, அதுமாதிரி நம்ம புஷ்சுவிற்கும் ஹாலிவுட் நடிகையுடன் ஆடியே ஆகணும் என்று அடம்பிடித்தால் வசதியாக போய்விட்டது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுப்போல் எனது ஆசை நிறைவேற்றிக்கொண்டேன்.படத்தை முடித்த கையுடன் வெளியிடக்காத்திருக்கிறேன்,எங்கும் சிவாஜி என்பதால் திரையரங்கு கிடைக்கவில்லை. பாடல் காட்சியை மட்டும் உங்ளுக்காக படைத்துள்ளேன்.பார்த்து மகிழவும்,இல்லை இல்லை படித்துப்பின் பார்த்து மகிழவும்.உங்களால் முடிந்தயளவு புஷ்சை ஆடச்சொல்லவும்,இல்லை என்றால் ஆட்டி வைக்கவும்,ஆம் அதுதான் நம்ம படத்தின் தலைப்பு மட்டுமல்ல விருப்பம்.நாம சொன்னா புஷ்சே ஆனாலும் கேட்டுக்கணும்.பாடலைக்காண இறுதியாகயுள்ள வார்த்தையோ,படத்தையோ அழுத்தவும்(press).


பாடலோ அல்லது எனது கருத்தோ உங்கள் உள்ளங்களை புண்ணாக்கிருந்தால் மன்னிக்கவும்





பாடலைப்பார்க்க இந்த வார்த்தை அல்லது மேலேயுள்ள படத்தை அழுத்தவும்/press செய்யக.

Tuesday, December 23, 2008

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் - குறள் சொல் விளக்கம்


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இக்குறளுக்கு சொல் விளக்கம் காண்போம்.

இருவினை என்பதின் விளக்கம்

இருவினை என்றால் நல்வினை, தீவினை என்று சொல்லப்படும்.
அதாவது
இன்பம்-துன்பம் , நன்மை-தீமை , பிறப்பு- இறப்பு என்பதைப் போல்.

இருவினை என்பது நல்வினை , தீவினை என்றால் நல்வினை எது தீவினை எது
என்று பாகுபாடு செயவது மிகவும் கடினமாக இருக்கிறது.

எடுத்துக்காட்காக
திருட்டு திருடனுக்கு நல்லதாக தோன்றுகிறது.அதுவே பிறருக்குத் தீமையாக விளைகிறது. நாட்டுக்காக உயிர் துறப்பது நாடு என்ற அமைப்பிறகு நல்லதாக
தோன்றும், மனித உயிர்கள் மரிக்கும் கண்ணோட்டத்தில் பார்த்தால் தீயதாக
கருதப்படும். இதனைப் பார்த்தால் பிறருக்கு நன்மை விளைப்பது நல்வினை என்றும், தீமை விளைப்பது தீவினை என்றும் வரையறை கொள்ள வேண்டியுள்ளது.

புலவர் குழந்தை அவர்கள் இருவினை என்பதற்கு பெரிய துன்பம் என்று பொருள்
கொள்வார்.


சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.


என்னும் குறளை உதாரணம் காட்டி,

இறைவனின் புகழைப் பாடினால் சிறிய துன்பம் மட்டுமல்ல,பெரிய துன்பம் வராது என்று இக்குறளுக்கு விளக்கம் கூறுகிறார்.


சோம்பேறிக்குச் சோறு போடுவது நல்லதா கெட்டதா ? பசியைப் போக்குவது என்ற முறையில் நல்லது. மேலும் சோம்பேறியாக்கி நம்மை ஏமாற்ற வழிசெய்கிறது என்ற முறையில் கெட்டது.

இதனால் தான் அவற்றை இருள் என்று சொல்ல வேண்டியுள்ளது.

நீச்சல் தெரியாத ஒருவன் தவறி, கிணற்றில் விழுந்துவிட்டான். மற்றொருவன் அதனைக் காப்பாற்றுகிறான்.பிழைத்தவன் காப்பாற்றியவனைப் பாராட்டுகிறான்.நன்றியுணர்வுடன்
நடந்து கொள்கிறான். காப்பாற்றிய செயல் முடிந்துவிட்டது. அதற்காக நன்றியுணர்வு காட்டுவதால் யாரும் நன்மை ? நன்றியுணர்வு காட்டாவிட்டால் யாருக்குத் தீமை ? உதவும் குணம் என்றும் உதவும். மறக்கும் குணம் என்றும் மறக்கும்.

இதனால் தான் " இருவினையும் சேரா " என்றார்.

கடவுளை ஒருவன் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடவுள் உதவுவார். பாராட்டுதல் நன்றியுணர்வு. பாராட்டாமை நன்றியின்மை . அவ்வளவுதான்.

கண்டபடிப் தின்றால் வயிற்றுவலி உண்டாகும்.மருந்து மூலம் வலி நீங்குகிறது. இங்கே மருத்துவர் கடவுள் ஆகிறார். மருத்துவரைப் பாராட்டுவதால் நமக்கு நன்மையோ தீமையோ விளைவதில்லை.

இவற்றை இருள்சேர் இருவினை என்று ஏன் சொல்ல வேண்டும் ? இருள் என்பது புலப்படாத் தன்மை.

நன்மையா - தீமையா ? மருந்து காப்பாற்றியதா - மருந்தின் தூண்டுதலால் உடல் தேறியதா ?
எல்லாம் மயக்க நிலை. அதுவே இருள்.


புகழ் என்பதின் விளக்கம்

இருள் அதன் எதிர்ச்சொல் ஒளி ஆகும். அறை இருட்டாக இருந்தால் விளக்கு ஏற்றினால் ஒளி வந்துவிடுகிறது. இங்கே இருள் என்பது மனிதனையும் , ஒளி என்பது இறைவனையும் குறிக்கும். இறைவனின் அடியை அல்லது புகழைப் வாழ்க்கையில் நம்முடைய இருள் போன்ற துன்பங்கள் விலகும்.


புரி என்பதின் விளக்கம்

செயல்புரி என்றால் செயலாற்று என்றும் செயலை விரும்பு என்றும் பொருள் கொள்கிறோம். அதுபோல, புகழ் , புரி என்பதற்கும் பொருள் காண வேண்டும்.

கயற்றில் இரண்டு புரிகள் உள்ளன. 3 , 4 , 5 புரிகள் உள்ள கயிறுகளும் உண்டு.
புரிகள் ஓன்றோடொன்று முறுக்கி இருப்பத போல் இறைவனை நாம் புகழால் முறுக்க வேண்டும்.

புரிநூல் அதாவது இறைவனிடமுள்ள பாச முறுக்கு உடையாம இருக்க இறைவனும் நாமும் சேர்ந்து நூல் கயிறாக மாற வேண்டும். அதுதான் புரிதல் ஆகும். புகழ் என்பது இங்கு முறுக்குதலாக உருவகம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிதல் என்னும் வினையால் அறியலாம்.

மாட்டு என்பதின் விளக்கம்

மாட்டு என்பது இறைவனும் நாமும் புகழ் என்னும் முறுக்கால் மாட்டிக்கொள்வதை உணர்த்துவதை உணரமுடியும்.

பொருள் என்பதின் விளக்கம்

இறைவனுக்குப் புகழ் உண்டு. அது நிலையானது.

மனிதனுக்கும் புகழ் உண்டு . அது இறைவனை அடைவதால் உண்டாகுவது .அது பொருளை அடைவதால் வருவது

அந்த பொருள் தான் மெய்ப்பொருளாகிய இறைவன்.

( செங்கை பொதுவனின் கடவுளின் நினைவுகள் என்னும் நூலில் இருந்து )


குறள் இன்பத்தைச் சுவைக்க விரும்புவர்
இந்த வலைப்பக்கத்திற்கு செல்லவும்

திருக்குறள் - Thirukkural

படமும் பாதிப்பும் - 23/12/08

இந்த படத்திற்கு ஏற்ற கவிதை




படம் ; "கடையம் ஆனந்த்"



இந்த படத்தைப் பார்க்கும்பொழுது பல எண்ண அலைகளை என் உள்ளத்தில் விளைவித்துவிட்டது.

இதை கவிதை என்பதைவிட கிறுக்கல்கள் என்றே எனது அகம் அழைக்க விழைக்கிறது.


தீவிரவாதம் ஆகட்டும், மதத்தின் பெயராலும் மண்ணிலே மனிதர்கள் மரிப்பதைக் காணுக்கையில் கண்ணீர் வருவதும், கடவுளை வேண்டுவதும்,அவருக்கு
ஆதரவு நல்க கூடாது என்று ஒவ்வொரு முறையும் என்னை நானே சொல்லிக்கொள்வதும்
முடிவு எடுத்துக்கொள்வதும் உண்டு.


1.முதலாவது கிறுக்கல்



பாவங்கள் எல்லாம்
படமெடுக்கையில்
பாரினில் மனிதர்கள் எல்லாம்
பரிதவிக்க தான் வேண்டும்.


வறுமையின் கொடுமையை வார்த்தையால் வடிக்க முடியாது.

இது நான் படித்த பல கவிதைகளின் கலவை என்றும் பாதிப்பு என்றும் கூறமுடியும்.

இந்த வரிக்கு உரிமை ஊதியம் (Royalties) என்னால் கேட்க இயலாது.சும்மா


2.இரண்டாவது கிறுக்கல்


வாழ்க்கையில்
வறுமையை
உயர உயர
உலகிலுள்ள
உயிர்களின்
உடைகளெல்லாம்
உரியுமாம்.


வீழ்வது வெட்கமல்ல, வீழ்ந்துக்கிடப்பதுதான் வெட்கம் என்ற வைர வரிகளை மட்டுமல்ல
எழுச்சியின் எண்ணத்தையும் எடுத்து உரைக்கிறது எனக்கு இந்த புகைப்படம்


3.முன்றாவது கிறுக்கல்



எழுந்துப் பார்
ஏமாற்றங்களுக்கு மட்டுமல்ல
ஏளனங்களும் உன்
எதிர்வர அஞ்சும்.
எதிரிகளும் உன்
காலடியில்
கண்ணீர் விட்டு
கரைய கூடும்.


இலங்கை என்ற சொல்லை இயம்ப பொழுதே இதயத்தில் இன்னலை வரச்செய்கிறது
ஈழம் என்கின்ற பொழுது ஈரம் சுரக்காத இதயங்கள் இந்தியாவில் மட்டுமல்ல,
அன்னைப்பூமியில் அவதாரம் எடுத்து அலைவதும், கட்சிக்கு காவடி எடுத்துக்கொண்டு இருக்கும் கயவர்களை காணும்பொழுது கண்ணீர் தான் வருகிறது.
கடவுளே உன்னை மனம் உருகி வேண்டுவது இது தான்,
அவர்கள் அன்னையின் மடியில் பிறக்கவும் வேண்டாம்.
தமிழர் என்று எண்ணிக்கையில் கூட்டவும் வேண்டாம்



4.நான்காவது கிறுக்கல்



அகதியாய்
அனாதையாய்
அன்னைப்பூமியே, உன் முன்னே
ஆதரவுற்று நிற்கிறேன்.
அவ்வப் பொழுது, நீயும்
அலையாய் அலையாய்
ஆர்பரித்து எழுகின்றாய்.நானும்
அக மகிழ்வதுண்டு. நீயோ
அலை அடித்து பின்
அமைதி ஆகிவிடுகிறாய்.இதுவோ
அடிக்கடி நிகழ்வுண்டு
அதைக் கண்டு
ஆறுதல் தான் அடையமுடிகிறது
அல்லலை
அகற்ற யாருமில்லை.
ஆதரவுக்கர நீட்டவும்
ஆளும் இல்லை
துன்பம் மட்டும்
தொடர்க்கதையாய்
தொடர்வதுண்டு எங்களுக்கு
துயரை துடைக்க தான்
தமிழரும் யாருமில்லை,
தலைவர்களும் யாருமில்லை
தரணியிலே
குண்டுமழையில்
குற்றுயிராய் கிடைக்கிறேன்
குடல் வற்றி
பசியால் பரிதவிக்கிறேன்
பார்ப்பதற்கு யாருமில்லை
பாதுகாக்கும் யாருமில்லை
புல் பூண்டு கூட முளைக்க முடியாமல்
பாலைவனமாய் போகிறது, இந்த
பூமி பகைவர்களால்
எப்போழுது இதை
புரிந்துக்கொள்ள போகிறாய் ?
அன்னைப்பூமியே
அலையாய்
ஆர்பரித்து போதும்
சனாமியாய் எப்போழுது எழுந்து
சீறப்போகிறாய் ? எங்களையும்
சுதந்திரக்காற்றை
சுவாசிக்க
செய்ய போகிறாய்.


சிறுவர்கள் முன்னிலைப் படுத்தி எழுதுவது தான் இந்த புகைப்படத்திற்கு
சிறப்பு மட்டுமல்ல,என்னுடைய கோபம் இந்த கிறுக்கலில் கொஞ்சம்
சீறி இருக்கிறது.



5.ஐந்தாவது கிறுக்கல்




பசிக்காக
பிழைப்புக்காக
படிப்பை மறந்தோம்.

பகைவரை வெல்ல
பல நாடுகளில்
படைகள் ஆகிறோம்.

காமத்திற்காக சில
கயவர்களுக்கு
காவு கொடுக்கப் படுகிறோம்.

பணத்திற்காக இன்னும்
பல பாவங்களுக்கு
பாசமற்ற ,
பரிவற்ற மனிதர்களால்
பலி கொடுக்கப் படுகிறோம்.

சமுதாயமே கொஞ்சம்
சீறி எழுந்து, எங்களை
சித்ரவதை சிறையிலிருந்து மீட்டிடு.

கூடுதல் இன்னும் ஒரு கிறுக்கல்

வறுமையை விரட்டுவதாகவும்
வசந்தத்தை வரவழைப்பதாகவும்
வாக்குறுதி தரும்
தலைவர்களை நம்பி,
உடையின்றி
உணவின்றி
வாழ்க்கைப்பாலைவனத்தில்
மாற்றுமழை வரும் என்று
வருடங்கள் போனால் என்ன
வயோதிகம் வரை
காத்திருப்போம்.



மனம்: இந்த படத்திற்கு ஏற்ற கவிதை ப்ளீஸ்

Sunday, November 30, 2008

மாய மந்திரம்



மதநூல்களை எடுத்துக்கொண்டு,
மார்க்கங்களைச் சொல்லுவதாகச் சொல்லிக்கொண்டு,
உழைக்காது
உட்கார்ந்துக் கொண்டு,
உபதேசிப்பதாக
உளறிக்கொண்டும் இருக்கும்
மனிதரிடம் ( மகான்கள் !!! ??? )
மாடமளிகையும்
மரியாதைகளும்
வந்துக் குவிகின்றன்.

மனதார
மண்டியிட்டுத் தொழுதுக்கொண்டு,
உழைத்து உழைத்து
களைத்துப் போகும்
மக்களிடம்
மண்குடிசையும்
கண்ணீரும் தான்
கடைசியில் மிஞ்சுகிறது.

Wednesday, November 26, 2008

வார்த்தை விளையாட்டு




வார்த்தை
வரம்பு மீறும்பொழுதும்,
வதைக்கும் பொழுதும்
வன்முறையாக
வடிவம் கொள்ளும், பின்
வருந்திப் பயனில்லை.

வார்த்தை என்பது ஒரு
வலி நிவாரணி
அதை அங்காடிகளில் தேடி
அலைய வேண்டாம்
அது அனைவரிடமும்
அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

விவாகங்கள் எல்லாம்
விவாகரத்துகளை நோக்கி
வீர நடை போடுகையில்
விழிகளில் வழிந்தோடும்
கண்ணீரிடம் காரணத்தைக்
கேட்டுப் பாருங்கள்
வார்த்தைகளால்
உள்ளத்தை
வருட தவறும் மனிதர்களால்
வாழ்க்கையே வெறுத்துப்போய்
உறவுகள் எல்லாம்
உடைந்துப் போகும் துயரத்தை
உரைக்கும்.

வலி குறைக்கும்
வார்த்தைகளை நவின்றால்
நண்பர்கள்
நிறைய உருவாகின்றார்கள், அதுவே
வலி கொடுக்கும்
வார்த்தைகளை விளம்பினால்
விரோதிகள்
விரைவில் உருவாகின்றார்கள்

வார்த்தை விளையாட்டில்
வித்தியாசத்தைப் பாருங்கள்
வினோதமாக இல்லை.

இயந்திர வாழ்க்கையில்
இல்லத்தாரின்
இதயங்களின் இலக்கு எல்லாம்
பணத்துக்குப் பின்னே
பயணக்கையில்
வார்த்தைத் தவத்துக்காக
வீற்றிருந்து வாடும்
பிஞ்சு நெஞ்சங்களில்
பாசமா படரும்.

வார்த்தைகளால்
வருடினால்
உறவுகள் மட்டும்
உறுதியாகுவதில்லை
வலி கூட தெரிய
வழி இல்லாமல் போகிறது.

வார்த்தை சாலங்களுக்கு
வசப்பட்டு பின்
விசனப்படும்
வாக்காளர்கள் உள்ளவரை
வானத்தைக் கூட
தொட முடிகிறது, எங்கள்
தலைவர்களுக்கு


சொல்லுக்கும்
செயலுக்கும்
சம்பந்தம் உண்டு என்பதை
சிந்திக்காத வரை
சங்கடங்கள் எல்லாம் உண்டாக தான்
செய்யும்.

இணையத்திலும்
தொலைகாட்சியிலும்
தொலைந்துப் போகும் மனிதர்களால்
வார்த்தைக்குக் கூட
பஞ்சம் வந்து விடுகிறது
பலரின் இல்லங்களில்

வார்த்தை என்பது
வரம் கொஞ்சும்
வாரித் தான் கொடுங்கள்
வாழ்க்கையும்
வளமாக்குங்கள்.

Tuesday, November 25, 2008

மாவீரர் நாள் வாழ்த்தும்---- சிவரமணி அவர்களின் கவிதையும்




தமிழன் என்றால்
வீழ்ந்தே சாவான் என்ற
வரலாற்றை மாற்றிய
வீரர்களே உங்களுக்கு எனது
வீர வணக்கங்கள்

உரிமைக்காக
உயிர் துறந்தாலும், நீங்கள் எங்கள்
உள்ளங்களில் என்று என்றும்
உறங்கும் தெய்வங்கள்

உங்களின்
கல்லறையும் கண்ணீரும்
கடமையாக
கயவரின்
கதை முடித்த வரலாற்றைச் சொல்லும்

உங்களின்
உதடுகள் மட்டுமல்ல
உள்ளமும் ஒவ்வொரு மணித்துளியும்
உச்சரித்திட்ட ஈழம்,
உருவாகும் நிச்சியம் என்னும்
உணர்வோடு
உறங்குங்கள் வீரர்களே

ஆண்டவனிடம்
அனுதினமும்
பொன்னும் பொருளும்
வேண்டி இறைஞ்சுவதில்லை
வேதனைத்தீயில் வாடும் மக்களுக்கு
விரைவில் விடியல் ஒன்று
விடிந்திடவே வேண்டுகிறது

கடமைக்காக
கல்லறையில்
கண்ணுறங்கும் வீரர்களை
காண்கையில்
கடவுளே உனக்கு
கருணையும் பிறக்காதா ?

இன்னலுறும்
இதயங்களை நோக்கையில்
இறைவா உனது
இமைகளும் திறக்காதா ?
இரக்கம் பிறக்காதா ?

அன்னியர் அகதி ஆக்கும்பொழுது
ஆத்திரம் வருகிறது
அன்னைப்பூமி ஆதரிக்க மறுக்கும்பொழுது
அழுகை வருகிறது.

கதற கதற
கற்பழிக்கப்பட்ட,
கடத்தப்பட்ட,
கொல்லப்பட்டவர்களின்
உண்மைகள் உரைக்கப்படும்பொழுது
உள்ளம் கூட உறைந்துவிடும்.ஆனால்
உலகமும் உறவும் அதைக்கேட்டு
ஊமையாய் இருப்பதாய் பார்க்கையில்
உயிரற்ற பொருளாய் என்னையும் படைத்திட்டால்
உணர்வற்று இருப்பேன் என்று
உரைக்க தான் முடிகிறது.





---------------------------------------------------------------


சிவரமணி அவர்களின் கவிதை

-------------------------------------------------------------



என்னிடம்
ஒரேயொரு துப்பாக்கி
ஒரேயொரு கைக்குண்டு
என் எதிரிக்கு எதிராய்ப்
போரைப்
பிரகடனம் செய்ய
என்னிடம்
ஒரேயொரு துப்பாக்கி
ஒரேயொரு கைக்குண்டு
எனினும் நான்
தளரவில்லை

எனது
கறைபடிந்த கரங்களின்
சாதகக் கோடுகள்
மறைந்து விட்டன்.
இங்கேயொரு
புதிய கோடு
வானிற்கும் மண்ணிற்கும்
நீளம் அளக்கவல்ல
உனக்கும் எனக்கும்
உயரம் காட்டவல்ல
இங்கேயொரு
புதிய கோடு

எனது துப்பாக்கி
பறிக்கப்படலாம்
எனது கைக்குண்டு
வெடித்துச் சிதறலாம்
ஆனால்
அந்தக் கோடு
அழிக்கப்படாது

ஆசையும் கனவும்
நிறைந்த என் இதயம்
பிளக்கப்படலாம்
ஆனால் எங்கள்
கறைபடிந்த
கரம் வரைந்த
அந்தக் கோடு
அழிக்கப்படாது
ஆனால்
எம் குழந்தைகளால்
கடத்தப்படலாம்

Tuesday, November 18, 2008

இயற்கையும் இறைவனும்




உலகில் நிதமும்
கலகம் நிகழும்
காட்சியைக் கண்டு,
கவலைக் கொண்டு,
கண்ணீர்யுற்று,
கடவுளைச் சாடுகின்றோம்.

இயற்கையைப் பார்
வாழ்க்கையைக் கற்றுத் தரும் எனும்
இறைவனின் தத்துவத்தை
இதயத்தில்
இருத்திக் கொள்ள
மறக்கவும்
மறுக்கவும் செய்கின்றோம்.

மண்ணில்
மரங்கள் எல்லாம்
மாயமானப் பின்
மழையைப் பொழியவில்லை என்று
மாயவனை
மனம் நோந்துக் கொள்வது
மடமை அன்றோ

மனித
மனங்கள் எல்லாம்
மரத்துப் போன பின், இந்த
மண்தான் என்ன செய்யும்
மயானமாக தானே
மாறச்செய்யும்

இன்பத்தையும் துன்பத்தையும்
இணைந்தே பகிர்ந்துக் கொள்ள
இருபாலரைப் படைத்து
இல்லறம் எனும்
இனிய வழியைக் காண்பித்தான்
இறைவன்

இச்சையை வாழ்க்கையின்
இலக்கு என
இட்டுக்கொண்டு,
இமைப்பொழுதும்
இன்புற்று
இருக்க மாதுவையும், மதுவையும் நாடி
இடுகாட்டில்
இடம் பிடிக்க அலைக்கின்றோம் நாம்.

காலில்
காயம் என்றால்
கண் கரைகிறது
கை விரைகிறது, இந்த
உடல் நிகழ்வே
உலகத்தின் உயிர்த்துடிப்பு என்று
உணர்வது எப்பொழுது ?

உள்ளம் என்பதை
உயிர்களின்
உள்ளே வைத்து
உருவம் கொடுத்து
உயிர் வாழ மட்டுமல்ல

துன்பம் நேர்கையில்
துயர் துடைக்கவும்
தோள் கொடுக்கவும்
துணிந்திட தான்.

இயற்கையும்
இறைவனும் ஒன்று தான்


அறிவை நம்புகிறவன்
இயற்கை நேசிப்பான்
இறைவனை நம்புகிறவன்
உயிர்களை நேசிப்பான்

மலராகட்டும்
மரமாகட்டும்
மண்ணில்
விதைப்பது தான்
விளையும் என்னும்
விதியின் வினைப்படி
மனித மனங்களில்
அன்பை விதைப்போம்
அகிலத்தை செழிக்க வைப்போம்


Monday, November 17, 2008

ஆயர்பாடி மாளிகையில்



ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ- அவன்
வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகிறான் ஆராரோ.



தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகிறான். தாய்மடியில் குழந்தை கண்ணன் எப்படி உறங்குவான் ? தாய் பாலை சுவைத்தபடியே தூங்குகிறான்.எப்படிப்பட்ட கண்ணனவன் ? மாயக்கண்ணன். கன்றின் உதாரணம் இங்கே ஏன் வந்தது ? நிகழ்கின்ற இடம் ஆயர்பாடி.


எந்த நிலையில் கண்ணன் தூங்குகிறான் ? வாய் நிறைய மண்ணை உண்டு, மண்டலத்தைக் காட்டிய பின் ஓய்வெடுத்துத் தூங்குகிறான். எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.மண்ணைத் தின்ற குழந்தை கண்ணனைக் கோபித்துக் கொண்டு தாய் யசோதா வாயைத் திறந்து காட்டும்படி கேட்கிறாள். வாயைத் திறக்கிறான் கண்ணன். அவனுடைய வாய்க்குள் பூமிப்பந்து சூழல்கிறது. தான் யார் என்பதைக் கண்ணன் விளையாட்டுப்போக்கிலேயே தன் தாய்க்கு உணர்த்திவிடுகிறான்.பிரபஞ்சமே அவனுக்குள் அடக்கம். அவன் பிரபஞ்ச சொரூபி.

அவதாரமாகிவிட்ட அவன் அடக்கமாக தான் யார் என்பதைத் தாய்க்கு உணர்த்துகிறான்.இந்த நான்கு வரிகளில் மனிதனுக்கும், பிரபஞ்ச இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு அற்புதமாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

பிரபஞ்சம், குழந்தை கண்ணனுக்குள் அடக்கம். கண்ணன் தாயின் மடியில் அடக்கம். பிரபஞ்சத்தில் மனித இயக்கமே தாய்மைக்குள் அடக்கம். கீதையில் கண்ணன் என்ன சொல்கிறான் ? பிரபஞ்ச இயக்கமே நானே இருக்கிறேன் என்கிறான்.



பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன்போல் லீலைசெய்தான் தாலேலோ - அந்த
மந்திரத்தில் அவருறங்க - அந்த
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !



கோபியருடன் கண்ணன் செய்த லீலைகள் பிரசித்தம். இதை வெறும் சம்பவமாகப் பார்த்தால்
ஆயர்பாடி கோபியருடன் கண்ணன் லீலைகள் செய்தான் என்பதோடு முடிந்துவிடும். தத்துவ விளக்கமாக இதற்குப் பொருள் சொல்லப்படுவதுண்டு. கண்ணன் பரமாத்மா. கோபியர் ஜீவாத்மாக்கள். கண்ணன் கோபியரைத் தன்னுடன் அய்க்கியப்படுத்திக் கொண்டதும் ஜீவாத்மா பரமாத்மா உறவினைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.சம்பவமாகப் பார்க்காமல் உருவகமாகப் பார்த்தால் இதற்கு ஒரு புதிய தாத்பர்யம் கிடைக்கிறது.

கோபியர் கண்ணனை நாடிச் செல்வது மட்டுமல்ல, கண்ணனே கோபியரைத் தேடிச் செல்கிறார். ஜீவாத்மா தன்னை நாடி வரவேண்டுமென்று பரமாத்மா விரும்புகிறது. ஜீவாத்மாதான் பல்வேறு பந்தங்களில் சிக்கி பரமாத்மாவை விட்டு விலகி விலகிச் செல்கிறது. ஆனால் ஜீவாத்மா பரமாத்மாவை நெருங்கும்போது என்ன நிகழ்கிறது ?



மந்திரத்தில் அவருறங்க - அந்த
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !



ஜீவாத்மா பரமாத்மாவை நெருங்குகின்றபோது ஆனந்த மயக்கத்துக்கு உள்ளாகிறது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் நெருங்கி விடுகிறபோது உலகமே இன்ப மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.

கண்ணன் ஒரு அவதாரம். தீமைகளை அடக்க வந்த அவதாரம். தீமைகளை அடக்கியவுடன் தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறிவிட்டதாக சாந்தி அவனுக்கு ஏற்படுகிறது. காளிங்க நர்த்தனத்தின் கருத்து இதுதான்.



நாகபடம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியபின்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ



மோகம் என்பது ஆசை. யோகம் என்பது ஆசையினைக் கடந்தநிலை. கண்ணனைப் பொறுத்தவரையில் அவன் மேற்கொள்கின்ற மோகநிலைகூட ஒரு யோகநிலை ஆகிவிடுகிறது. அது எப்படி ?

கண்ணன் வெளிப்படுத்துகின்ற தோற்றம் மோகம். அவன் குறிவைக்கின்ற இலக்கு யோகம். கோபியருடன் புரிகின்ற லீலை மோகம். அதனால் அவர்கள் பெறுகின்ற நிலை யோகம். பரமாத்மா, ஜீவாத்மாக்கள் அனைத்தும் யோகநிலையை அடைய வேண்டுமென்று விரும்புகிறது. அதற்காகவே ஜீவாத்மாக்களைத் தன்பால் ஈர்க்க பரமாத்மா மோகநிலையினை மேற்கொள்கின்றது. பரமாத்மாவைப் பொறுத்தவரையில் மோகநிலை, யோகநிலை ஆகிய இரண்டும் ஒன்றேதான்.

கடமைகளை முடித்துக்கொண்டு அவன் உறங்கினாலும், அவனை மற்றவர்கள் உறங்க விடுகிறார்களா என்ன? யாரவனைத் தூங்க விட்டார் என்கிற கேள்வி அதிலிருந்துதான் எழுகிறது.



- அவன்
மோகநிலை கூட ஒரு
யோகநிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்க விட்டார் ஆராரோ !
யாரவனைத் தூங்க விட்டார் ஆராரோ !


பரமாத்மாவாகிய கண்ணன் தூங்கிவிட முடியுமா என்ன? அவனுடைய தூக்கம்கூட ஒரு மாயத் தோற்றம்தான். தூக்க நிலையில் விழித்திருப்பான்.விழித்த நிலையில் தூங்குவான்.



கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகைப் பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ !



நிசமாகவே கண்ணன் தூங்கிவிட்டால் என்ன ஆகும்? பிரபஞ்ச சக்தியான கண்ணன் செயலற்ற நிலையினை அடைந்துவிட முடியாது. பிரபஞ்ச சொரூபியான கண்ணன் செயல்படாமல் இருந்துவிட்டால், பிரபஞ்ச இயக்கமே ஸ்தம்பித்துப் போகும். கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும். ஆகவே அவனைத் தூங்க விடக் கூடாது. அதனால் அன்னையர் அனைவரும் சேர்ந்து அவனைத் துயில் எழுப்புவது அவசியமாகிறது.

அவன் துயிலெழுந்த பிறகு என்ன நடக்கும்? அவனுடைய லீலைகள் ஆரம்பமாகிவிடும். பிரபஞ்ச இயக்கம் சுறுசறுப்பு அடையும். கண்கொள்ளா அவனுடைய அழகுக் காட்சியைக் கண்டு தரிசிக்கலாம். போதையூட்டும் அவனுடைய முத்தங்களைப் பெற்று மகிழலாம்.

பாடல் முழுவதுமே கண்ணனின் உருவகம் தான்.கண்ணன் - கோபியர் உறவை வைத்து ஜீவாத்மா பரமாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.தீமைகளை அழித்து நன்மைகளை மேலோங்கச் செய்யும் அவதாரத்தின் நோக்கம் விளக்கப்படுகிறது. அதே சமயம் பகவானின் தேவை மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.இந்த உலகமே ஒரு முடிவில்லாத போர்க்களம். போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். உலகம் முற்றிலும் நன்மையானதாகவோ அல்லது தீமையானதாகவோ இருந்து விடமுடியாது.நன்மைக்கும், தீமைக்குமிடையே போராட்டம் நடந்தபடியேதான் இருக்கும். இது மனித இயல்பின் மாற்ற முடியாத தன்மை.

அதே சமயம் தீமை மேலோங்கி நன்மையை அழித்துவிட அனுமதிக்கவும் முடியாது. தீமையின் கை ஓங்குகின்ற போதெல்லாம் பகவான் அவதரித்து தீமையை வெற்றிகொண்டு நன்மையை நிலை நாட்டுகிறார். அதுதான் " சம்பவாமி யுகே யுகே. "

இது ஒருபுறமிருக்க, மனித மனதுக்குள்ளேயேகூட நன்மைக்கும், தீமைக்குமிடையே தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதில் தீமையின் சக்தி மேலாதிக்கம் பெற அனுமதித்துவிடக் கூடாது.மனதுக்குள் ஆதிக்கம் செலுத்துகின்ற தீமையைக் கட்டுப்படுத்துவதற்கு வழி என்ன? நன்மையின் வடிவாக இருக்கும் பகவானிடம் மனதைச் செலுத்துவதன் மூலம் தீமையின் ஆதிக்கத்தைக் குறைத்துவிட முடியும். அன்பின் சொரூபம் இறைவன். அவனை நெருங்குவதன் மூலம் மன அமைதி பெற்று நிம்மதியை நம்மால் அனுபவிக்க முடியும். ஜீவாத்மா பரமாத்மாவைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இதிலிருந்துதான் உதயமாகிறது.

ஒரு தத்துவதை இங்கே புரிந்துகொள்வது அவசியம். மனிதகுலத்தின் துயர் துடைக்க பகவான் தாமாகவே அவதரிக்கிறார். மனித இனத்தை உயர்த்துவதற்கு அவரே மனிதனாகவே பிறந்து, மனிதர்களின் சுகதுக்கங்கள் அனைத்திலும் பங்கு பெறுகிறார். கண்ணனுடைய அவதாரத்தில் லெளகீய இன்பங்களைக் கூட மனிதனுக்கும் கற்றுத் தருகிறார். சரீரம் எடுத்தபின் சரீரத்தின் சுகங்களைப் புறக்கணித்துவிட முடியாது. கோபியர்களுடன் கண்ணன் புரிகின்ற லீலைகளின் தாத்ப்ர்யம் இதுதான்.

சிற்றின்பம் இல்லாமல் பேரின்பம் இல்லை. சிற்றின்பத்தில் திளைக்கின்ற மனித உயிர், அதை மேல்நிலைப்படுத்துகின்றபோது அதுவே பேரின்பமாகி விடுகிறது. உலகில் மனிதனாகப் பிறந்தபிறகு மனித வாழ்க்கையின் ஆசாபாசங்களை அனுபவிக்காமல், பிறவிப் பெருங்கடலை நீந்துவது சாத்தியமில்லை.

கண்ணனாக அவதரித்து ஆயர்பாடியில் வாழ்ந்த மாயவனின் வாழ்க்கை இதைத்தான் நம்க்கு எடுத்துக் காட்டுகிறது.






ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல்
மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணனை உண்டு
மண்டலத்தை காட்டியப்பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவளுரங்க
மயக்கத்திலே இவனுரங்க
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)

நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அந்த மோகநிலைக் கூட, ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன் பொன்னழகை பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெருவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)

Tuesday, November 11, 2008

மாதங்கி அவர்களின் கவிதைகள் - 1 (நாளை பிறந்து இன்று வந்தவள் )



இந்தக்கவிதை
வாசிக்கும் பொழுது, நான்
வசிக்கும் தேசத்தின்
வாசம் தான்
வீசுகின்றது.




தீவு விரைவுச் சாலையில்



வண்டிகள்
வழுக்கிக்கொண்டு
சொல்லும்
இந்தத் தீவு விரைவுச்சாலை நெடுகிலும்
சிந்தியிருப்பவை
உதிரா இலைகளைக் கொண்ட
சாலையோர மரங்களின்
நிழல்கள் மட்டுமே





Monday, October 27, 2008

சீனத்தோட்டம் (புகைப்படங்கள்)

















Wednesday, September 3, 2008

அ என்றால் அம்மா தொடர் பதிவு ( A For Apple ... )



சும்மா இருந்த என்னை இந்த தொடர் பதிவு விளையாட்டிற்கு
அழைத்த அருமை நண்பர் விஷ்ணுவிற்கு எனது நன்றிகள்.

எண்ணற்ற இணையத்தளங்கள் இருந்தாலும் இதயத்தில் இடம்பிடிப்பவை ஒரு சிலதே.

"அ என்றால் அம்மா" என்பதை போல் அடியேனின் அகத்திலும்
அடிக்கடி நுழையும் இணையத்தளங்கள் இவைகளே.

படிக்கும் பலருக்கு பயனளிக்கும் என்பதால்
பதிவுமிட்டு பட்டியலும் இட்டு உள்ளேன்.

A
http://answers.com
அனைத்து வகையான தகவலுக்கான தளம்

http://aiyoo.org
பசியாறும் பொழுது படம் பார்க்க உதவி செய்வது உடன் உணவை உள்ளே தள்ளி உடல் பெருக்கம் என்னும் உயர்ந்த பணியை செய்வது.


B

http://bangalorelive.in
"பெங்களூரு" பற்றிய செய்திக்காக நாள்தோறும் படிப்பது.

D

http://designmyroom.com/
கட்டடக்கலையின் மேலுள்ள ஆர்வத்தால் அடிக்கடி போவது உண்டு.


http://dpreview.com/

நிழம்பி (camera) பற்றிய விவரங்களுக்காக செல்வது.

http://dictionary.reference.com/

ஆங்கிலத்தை அறிந்து கொள்ளவும் தமிழ் சொல்லாக்கம் முயற்சிக்காக செல்வது.

E

http://www.everydayhealth.com
உடல் நலன் பற்றிய தகவல்களைத் தரும் தளம்.

http://dailythanthi.com

சில நாளிதழ்கள் தமிழுக்கும் ஈழ மக்கள் நலனுக்கும் எதிராக இருப்பதால், தமிழ் மேல் கொண்ட பற்றால் விரும்பி படிக்கும் செய்தித்தாள்.

F

http://football365.com/
சிங்கை வந்த பிறகு எங்கு திருப்பினும் கால்பந்து
அதனால் அடியேனும் அதற்கு அடிமையான தளம்.


G

http://www.google.com.sg/
அனைத்துக்கும் அடைகலம் அடையுமிடம்.

http://www.mozilla.com/en-US/

இணையத்தின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்திய உலாவி. தமிழ் விசை போன்ற இணையுதவிகளை (add ons)உள்ளடக்கி இருப்பதால்.

K

http://kannadaaudio.com/
எனது கண்கள் இரண்டு என்றால் கன்னித்தமிழும்
கன்னடமும் என்று சொல்வேன்.
தமிழை படிக்கவிட்டாலும் கன்னடப்பாடலை
செவிகளில் கேட்கவிட்டாலும் இருக்கமுடியாது.


L

http://www.lovefoodhatewaste.com/
காய்கறி,உணவு பற்றிய அரிய செய்திகளைச் சொல்வது.


M

http://www.makeuseof.com/
இணையத்தகவல்களையும் அள்ளித் தரும் இணையத்தளம்.

N

http://www.nationmaster.com/
அகிலம் எவ்வளவு பரந்து விரிந்து உள்ளது என்பதைப் பறையும் தளம்.

S


http://www.sciencedaily.com/

அறிவியலைப் பற்றிய அருமையான தகவல்களை தரும் தளம்.

http://www.smugmug.com/
புகைப்படங்களைப் பார்க்க போகும் இணையத்தளம்.

http://www.streetdirectory.com/
சிங்கை சுற்றுவதற்கு சுற்றுலா வழிகாட்டியாய் உதவும் தளம்.


V

http://www.veoh.com/
படங்களைப் பார்க்க பயன்படும் அருமையான தளம்.


மூவரை அழைக்கவேண்டும். அதனால்
மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது.

கவிதைக்காக வலைப்பக்கம் சென்றமையால்
வலையை அதிகமாக விரிக்க வேண்டி உள்ளது.

அதிகமாக ஆழமாக சிந்தித்தால்
அகப்பட்ட அரிமாக்கள் (சிங்கங்கள்) இவர்கள்
அய்யோ என்று
அலறுவது கேட்கின்றது,
அடிக்கவும் வருவது தெரிகின்றது
அதாவது அன்பால், தயது செய்து
அடியேனை மன்னிக்கவும்



1. அன்பு நண்பர் U.P.Tharsan அவர்கள்(கவிதையாலும் இணையத்தகவல்களாலும் கலக்கிக் கொண்டு இருப்பவர்)

2.அன்பு தோழி Divyapriyaஅவர்கள் (தன்னுடைய நகைச்சுவை பதிவுகள் நம்முடைய நெஞ்சங்களை அள்ளிக் கொண்டு இருப்பவர்)


3. அன்பு தோழி தாரணி பிரியாஅவர்கள்
(பதிவுகளால் பலரின் கவனத்தை கவர்ந்தவர்)

விதிமுறைகள்

1.மூவரை விளையாட்டிற்கு அழைக்கவேண்டும்.

2.தங்களுடைய தளங்களைத் தரக்கூடாது.

3.அடிக்கடி அணுகும் தளங்களை அளிக்கவேண்டும்.

4.தொடர் பதிவின் தலைப்பும் கருத்தும் அ என்றால் அம்மா அதாவது A For Apple

Tuesday, August 19, 2008

மாயோனின் பாடல் மழலையின் குரலில்

Monday, August 11, 2008

உண்மைக்கு உயிர் கொடுப்போம்


"உத்தமர்களின்
உயிர்
உண்மையே
உணவன்று"

எத்தனை அருமையான வரிகள்

வாழ்ந்துக் காட்டிய காந்தியின்
வாழ்க்கை ஆயிரம் பாடங்களை நமக்கு கற்றுத் தருகின்றது.


"உண்மை உரைப்பது கடினம்
பொய் சொல்வது எளிது"

என்று எண்ணத்தை உடையவர்களும் உண்டு.
அது பெரிய தவறு.

பொய் புனைந்தவன், தன் சொன்னவற்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் மாட்டிக்கொள்ள வேண்டும்.

இது எவ்வளவு பெரிய துன்பம்.
உண்மை உரைப்பவனுக்கு ஒன்றுமில்லை

இதை உணராமல் பொய் புனைவதை ஒரு கலையாக கருதி
வளர்த்து வருகின்றோம்.

பொய் ஏன் தோன்றுகின்றது?
எது காரணம்?
தேவைதானா?
என்றாவது ஒரு நாள் எண்ணிப்பார்த்தோமா?



"பொய்ச்சொல் கேளா வாய்மொழிமன்னன்"
என்று தயரதனைக் கம்பன் பாராட்டுகின்றான்.

தயரதன் பொய்யைக் கேட்டதுமில்லை,
உரைத்துமில்லை என்று கூறுகின்றான்.
இது எப்படி இயலும்?

ஒருவன் கையூட்டு வாங்காமல் வாழ்ந்துவிடலாம்,
கொடுக்காமல் இந்த நாட்டில் வாழ இயலுமா?

பிறர் புனையும் பொய்யைக் கேட்காமல் எப்படி இருக்க இயலும்?
சொன்ன பிறகுதானே அது உண்மையா பொய்யா என்று புரியும்!

பல ஆண்டுகள் கம்பனின் கருத்துக்கு பொருள் விளங்கவில்லை.
ஒரு நாள் கல்லூரி வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதுதான் புரிந்தது.

ஒரு மாணவன் வகுப்பிற்குத் தாமதமாக வந்தான்.
"ஏனப்பா தாமதம்" என்று கேட்டேன்.

"மிதிவண்டி பழுதாகிவிட்டது" என்றான்.

"சரி,உள்ளே வா" என்றேன்,
அவன் உள்ளே நுழைந்தவுடன் வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.

"ஏனப்பா சிரிக்கிறீர்கள்?" என்றேன்.

"அவனிடம் மிதிவண்டியே இல்லை" என்று கூறக் கேட்டதும்
அவனிடம் கோபத்துடன், "ஏன் பொய் சொன்னாய்" என்று கேட்டேன்.

அவன் இயம்பிய பதில்தான் என் இதயத்தில் இருந்த
சந்தேகத்தைச் சரி செய்தது.

"நான் உண்மையைச் சொன்னால் என்னைத் திட்டுவீர்கள்,
அதனால்தான் பொய் சொன்னேன்" என்று கூறினான்.

நாம் உண்மையை மதிக்காத போது
பொய் பிறக்கின்றது.

இது எவ்வளவு பெரிய வாழ்வியல் உண்மை!

தயரதன் உண்மையை மதித்தான்.
எனவே அவனிடம் யாரும் பொய் புனைய வேண்டியதில்லை.
புனைவதற்கு தேவையுமில்லை.

சூட்சும்மாக மாபெரும் சமுதாயச் சிந்தனையை நமக்குள் விதைத்துவிடும்
கம்பனின் கவித்துவத்திற்கு ஈடு இணையேயில்லை.

அதுமட்டுமல்ல,ஒன்றை மதிக்காத போது,
அதற்கு எதிரான ஒன்று தோன்றிவிடுகிறது என்பதுதானே இயற்கை.

நன்றாக நினைத்துப் பாருங்கள்.
முதன்முதலில் பொம்மையை உடைத்துவிட்ட குழந்தை,
அம்மாவிடம் ஓடிவந்து,"அம்மா,பொம்மை உடைந்துவிட்டேன்"
என்றுதான் சொல்லும்.

"சனியனே பொம்மையை உடைத்துமில்லாமல்
உடைத்தேன் என்று சொல்கின்றாய்" என்று திட்டி,நான்கு
அடியும் அடிப்பாள் தாய்.

அன்றைக்கு முடிவு செய்கிறது அந்தக் குழந்தை.
"இனிமேல் உண்மையை உரைக்கக் கூடாது" என்று.

அன்பை மதிக்காத அகிலத்தில்
பகையை பெருகின்றது.

உரிமையை மதிக்காத உலகத்தில்
உயிர் இழப்புகள் உண்டாகின்றது.

நேர்மை மதிக்காத ஞாலத்தில்
தவறுகள் தோன்றுகின்றது.

பெண்மை மதிக்காத இல்லத்தில்
இருள் உண்டாகின்றது

என்வே உண்மைக்கு உயிர் கொடுப்போம்.
உலகத்தை உணர்வு உள்ளதாக ஆக்குவோம்.


Wednesday, July 23, 2008

கருப்பு ஜூலை -கண்ணீர் அஞ்சலி




இறைவா ! ஏன்
இந்த சோதனை
இழந்த
இழப்புகள் தான் எத்தனை
இன்னும் தொடரவேண்டுமா?
இந்த வேதனை
என்று என்
இன மக்களுக்கு கிடைக்கும் விடுதலை


குட்டிக்குட்டி
கிராமங்கள் எல்லாம்
சுயாட்சியை அறிவித்து விட்டு
சுதந்திரக்காற்றை
சுவாசிக்கும் பொழுது, என்
இதயம் விம்முவது
இது தான்
இறைவா நீ
இருக்கின்றாயா
இல்லை
இறந்துவிட்டாயா என்று தான்

ஊடகங்களில் தான்
எத்தனை வதந்திகள்
கை,கால்,உயிர் வைத்து
எத்தனை செய்திகள்
கேட்க கேட்க
உடைந்துவிடுகிறது
உள்ளம்

வழி நடத்த தலைமை இன்றி
வழி தவறி
விடுமா ? இந்த
விடுதலை வேள்வி
இல்லை
கொடுக்கப்பட்ட,
கொல்லப்பட்ட
உயிர்களின் மதிப்புகள்
அவ்வளவு தானா?

இந்த உயிர்
இருக்கையில்
என் சொந்தங்கள்
உரிமையுடன் வாழும்
காட்சியை
கண் கொண்டு
காணாமலே
கண் மூடிவிடுவேனோ?




Wednesday, May 14, 2008

அம்மா என்றொரு ஆன்மா



இது கவிஞர் அரிமதி இளம்பரிதி தன் அன்னைப் பற்றி எழுதிய ஒரு கண்ணீர் கவிதை
படிக்க படிக்க கண்ணீரால் உள்ளத்தைக் கரைய வைத்து,நம்முடைய தாயின் நினைவுகளை கண் முன் காட்சியாக காண வைக்கிறது

ஒரு கவிஞன் அழகாக கூறினான்

"வீட்டின் பெயரொ அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்"

இந்த அவல நிலை இன்று நாட்டில் தலைத்தூக்கி உள்ளது.
கண்டிப்பாக அன்புக்கு மனிதன் அடிமை ஆகும்போது ஆபாசங்களும், வன்முறைகளும்
நாட்டில் தலைவிரித்து ஆடமுடியாது.அகிலமும் அமைதியாகவும், அழகாகவும் இருக்கும்




அம்மா
நீ முகமெல்லாம் பவுடர் பூசி
பொட்டிட்டு
பூ வைத்து
நடந்து வந்தால்
வருவது
என் அம்மாவா?
அல்லது
அம்மனா? என்று
எனக்கே தெரியாது?
யாரென்று
எனக்கும் புரியாது?
......

எம்.எல்.ஏ.க்களை
அறிந்து வைத்திருந்தேன்
என்ன புண்ணியம்
எமனை மட்டும்
தெரிந்து
வைத்திருக்கவில்லையே
எல்லோரும்
என்னைப்
புரிந்து வைத்திருந்தார்கள்
ஆனால்
அந்த எமனுக்கு மட்டும்
நானென்ன
புரியாதப் புதிராக ஆகி விட்டேனா?
அல்லது
தெரியாத நபராக மாறி விட்டேனா?

.........

மனிதன் என்பவன்
தன்னைப் பற்றியே பேசுவான்
இது மரபு

நீயோ
என்னைப் ப்ற்றி
மட்டுமே பேசுவாய்
இது
உன் இயல்பு

உன்னைத் திட்டினால்
நீயோ
பயந்து விடுவாய்
ஒரு பேச்சிற்காக
உன் மகனான
என்னைத் திட்டினால்
நீயோ
பாய்ந்து விடுவாய்


ஏனம்மா
உன் மகன்
நானென்ன
உனக்கு
இனிக்கும் தேனாம்மா

.............

அம்மா
நீ
அரசு மருத்துவமனையில்
உன்னையே நீ மறந்து
முணுமுணுத்தபோது
மருத்துவர்கள் சொன்னார்கள்
உனக்கு
மூளையில் பிரச்சனையென்று

தாயே
இயற்கையின்
கொடுமையைப் பார்த்தாயா?
நம் குடும்பத்திற்கே
மூளை நீ
உன் மூளையா
முடங்கிப் போயிற்று?
எல்லாம்
காலத்தின் கோலம்
நான் செய்த பாவம்

...........

ஒரேயொரு முறை
விரல் அளவுப் பொருளை
நான்
வாங்கிக் கொடுத்தாலும்
அதனை
எவரெஸ்ட் மலை அளவு
நினைத்துக் கொள்வாய்
நம் வீட்டிற்கு
யார் வந்தாலும் சரி
இது என் புள்ள
வாங்கிக் கொடுத்தது என
புல்லரிக்கச் சொல்வாய்

...............


தாயே
உன் புன்சிரிப்பு
அது
இயற்கைக் கொடுத்த
ஒரு பரிசளிப்பு

.............

உடம்பிற்கு முடியலேப்பா
என்று அடிக்கடிச்
சொல்லிக் கொள்வாய்
ஆனால்
ஓர் ஒலிம்பிக்
வீராங்கனையைப் போல்,
வீடெங்கும்
ஓடி ஆடி
உழைத்து முடிப்பாய்
கடைசியில்,
உடல் வலியால்
நீ
துடிப்பாய்

..................

தாயே
உனக்கும் சரி
எனக்கும் சரி
மனம் சில நேரம்
மணம் இழக்கும்
குணம் பிசகும்
கனமாகி
கடவுளிடம் கூடவே
வேண்டச் சொல்லும்
எல்லாம்
ஒரு நாளில் சரியாகும்
பின் வீடே
குதூகளிக்கும்

மன வருத்தம்
இல்லை யென்றால்
அங்கே
மகிழ்ச்சிக்கு
இடம் ஏது தாயே

உனக்கு
கோபம் வரும் போதெல்லாம்
கொஞ்சலாய் நீ
ஒன்றைச் சொல்வாய்
எனக்கு
உன்னை விட்டால்
வேறு யார் இருக்காப்பா.. என்று

அட போம்மா..
என்னை நீ
நம்பியதற்குப் பதில்
அந்த
எமனையாவது
நம்பியிருக்கலாம்

அவன்
கயிற்றையாவது மாற்றிப்
போட்டிருப்பான்

நீ வாழ
காலத்தையும்
கொஞ்சம்
கூட்டியிருப்பான்

உயிர்ப் பறிக்க வந்த
எமனோ
உன்னைச் சுற்றி

ஊரும், உறவும்
உன் படுக்கையைச் சுற்றி
உன் பார்வையோ
ந்ம் வீட்டைச் சுற்றி

உன் ஆன்மாவோ
சத்தியமாய்
என்னைச் சுற்றி

நான்,
அப்பா,
உன் மருமகள்,மகள்கள்
பேரப் பிள்ளைகள்
இவர்கள் எல்லோரும்
இப்போது
உன் படத்தைச் சுற்றி

இனி என்
வாழ்க்கையே
உன்னைச் சுற்றித் தாயே
...........

இறப்பும் ஒரு வகையில்
இயற்கையின்
திட்டம்தான்
இல்லையென்றால்
இருபத்து நான்கு மணிநேரமும்
உன்னை நான்
நினைத்துக் கொண்டிருப்பேனா?
..............


நம் வீட்டுக்
கூட்டுக் குடும்பத்தில்
நீ மட்டும்
தனிக் குடித்தனம் நடத்த
தனியாக நீயோ
சென்று விட்டாய்

ஏனம்மா?
அப்பா என்ன
ஏதேனும்
தப்பாகப் பேசினாரா?
மகன்
நான் உனக்குப்
பிடிக்கலையா?
மருமகள்
உன்னை என்ன
கவினிக்கலையா?

தனியாக
நீ வேண்டாம் தாயே
எனக்கு
இணையாக
வந்து சேர் உடனே

அம்மா
தனிமை
மிகப் பெரும்
கொடுமை
...............

அம்மா
துவைத்து..துவைத்து
உன் எலும்பும்,தோலும்
எத்தனை முறை
நொந்துப் போயிருக்கும்

பாவம்
உழைத்து, உழைத்துஇ
அவைகளெல்லாம்
உன் இறப்பிற்கு முன்னை
செத்துப் போயிருக்கும்
..................

நம் வீட்டு
குடும்ப விளையாட்டில்
விளையாட
அணிப் பிரிப்போம்
நான் மட்டும்
என் புள்ளப் பக்கம்
நீங்களெல்லாம்
எதிர்ப் பக்கம் என்பாய்
இதை
முந்திக் கொண்டு
நீ சொல்வாய்


இன்று
இப் பக்கம் நானம்மா
திசைத் தெரியாமல்
எப்பக்கம்
நீ அம்மா

......................






Sunday, May 11, 2008

அன்னை என்னும் தெய்வம்




கண்ணுக்கு தெரியாதவன்
ஆண்டவன்
கண் முன்னே
காட்சி அளிக்கும்
கடவுள் என்றால்
அது
அன்னை அல்லவா


ஆண்டவனைத் தொழ
அகிலத்தில்
ஆயிரம்
ஆலயங்கள் இருந்தாலும்
அன்னையில் சிறந்த
கோவிலும் இல்லை.

அன்பைப் பொழிய
அறிவை ஊட்ட
அனைத்தும் கற்றுத் தர
ஆண்டவனின்
அவதாரமாய்
தாய் என்றும்
தாரம் என்றும்
பெண்மைக்கு தான் எத்தனை
பெருமை



அதிசியம் என்றும்
ஆண்டவன் என்றும்
அவதாரம் என்றும்
அன்னையை
அபிஷேகிக்கப்பிதை விட்டு
அன்பைப் பொழிவோம்
முதியோர் இல்லங்கள்
மூலைக்கு மூலை
முளைப்பதை
முளையிலே அழிப்போம்



Tuesday, April 29, 2008

அன்பே சிவம்



ஆண்டவனின்
அருள் வேண்டி
ஆலயத்திற்கு
ஆயிரம் ஆயிரம்
அன்பளிப்பை
அளிக்கின்றாய்.

ஆண்டவனை
சிற்பங்களிலும்
சிலைகளிலும்
கற்களிலும்
உருவம் கொள்கிறாய்.

அவனோ
உயிருள்ள
உள்ளங்களில்
உறைந்து
உள்ளதை
உணர மறுக்கின்றாய்.

பகவானுக்கு செய்வது
புண்ணியக்கணக்காக மாறும் என்று
எண்ணிக்கொண்டு
பரிதவிக்கும் உள்ளங்களுக்கு
பரிவுக்காட்டாமல்
பாவக்கணக்கை இரட்டிப்பு
ஆக்கிக்கொண்டிருக்கிறாய்.

ஆராதனைகளிலும்
அபிஷேகங்களிலும்
ஆண்டவனின்
அனுதாபத்தை
அடைந்திட
அனுதினமும்
அலைக்கின்றாய்.

அஸ்திகளை
அள்ளிக்கொடுத்து
ஆசிரமங்களையும்
ஆபாச சாமியார்களையும்
அரவணைக்கின்றாய்.

ஆண்டவனே உருவான
அன்புள்ளங்கள் இருக்கும்
அனாதை இல்லங்களை
ஆதரிக்க மறுக்கின்றாய்.


மக்களுக்கு செய்வதே
மகேசனுக்கு செய்வது என்று
மனம் உணர
மறுக்கின்றாய்.

அன்பும்
சிவனும் வேறு அல்ல.
இரண்டும் ஒன்றே என்று
உணர்ந்திடு
அதுவே
அவனின்
மந்திரம் என்று
அறிந்திடு



(வ.வா.சங்கம் போட்டிக்காக..)

திருமணம்





இரு கண்கள் நோக்கி
இரு பெயர்கள் எழுதி
இரு கைகள் கோர்த்து
இரு உடல்கள் இணைந்து
இரு உதடுகள் நனைந்து
இருப்பது மட்டுமல்ல,

இரு இதயங்கள் பரிமாறி
இரு உள்ளங்கள் ஒன்றாகி
இருவரின்
உணர்வுகளை மதித்து
சுக துக்கங்களையும்
பிள்ளை வளர்ப்பையும்
சரிசமமாய் சுமந்து
அடுப்பங்கரையும்
பள்ளியறையும் பகிர்ந்து
தாயாய்
தந்தையாய்
தோழியாய்
தோழனாய் இருந்து
உறவாடும்
உன்னதமான
உறவுக்கு பெயர் தான் திருமணம்.




(வ.வா.சங்கம் போட்டிக்காக..)

Monday, April 28, 2008

திபெத்

Sunday, April 20, 2008

இதயம் இரண்டாகிறது !!!




இல்லம் என்றதும்
இதயம்
இரண்டாகிறது !!!
இருமனங்கள்
இணையும்
திருமணத்திற்குப் பிறகு
தாய் என்றும்
தாரம் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இலங்கை என்றதும் கூட
இதயம்
இரண்டாகிறது !!!
இந்தியாவில்
இந்திராவின் மூத்த‌ மகன்
இறந்த பிறகு
இந்தியன் என்றும்,
தமிழன் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இவற்றையெல்லாம் கண்டு
இருக்கையிலே
இதயம் இயம்புவது
இதுதான்

"இன்னலைத் துடைக்க‌
இயலாமல்
இருப்பதை விட‌
இறப்பதே மேல் என்று "



(வ.வா.சங்கம் போட்டிக்காக..)


Wednesday, April 16, 2008

தோல்வி ( சின்னம் - 3 )






சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.



தோல்வியும் ஒரு சின்னம் தான்.ஆம்
துவண்டுவிட்டால்
தோல்வியும் ஒரு சின்னம் தான்
துணிந்துவிட்டால்
சின்னங்கள் எல்லாம்
பின்னங்களாகும்.
வெற்றிகளே
முழு எண்(ணங்)களாகும்.

உடல் வலியை நீக்க
ஆயிரம் மருந்துகள் உண்டு.
மன வலியைப் போக்க
மார்க்கமுண்டு என்றால்,அது
நம்பிக்கையே.

நம்பிக்கையுடன்
நடைப்போடுங்கள்
நாளைய உலகம்
நம் கைகளிலே.



அன்பு

மழலைச்செல்வம்



Tuesday, April 15, 2008

நேபால்



அன்று
மன்னராட்சி
இன்று
மாவோயிஸ்டு ஆட்சி

மக்கள்
மனங்களில்
மகிழ்ச்சி பிறக்கட்டும்.

ஆயுதங்கள் அற்ற
ஆட்சிக்கவிழ்ப்பு அற்ற
அமைதியான வாழ்க்கை
அமையட்டும்.


prajavani.net

Tuesday, April 8, 2008

நினைவு நதி







நினைவு
நதியில்
நீந்தும்பொழது எல்லாம்
நாம்
நனைந்து விடுகிறோம்

மனத்தில்
மறுக்கமுடியாத
மகாத்மாவும்
மட்டுமல்ல
இரக்கமற்ற
இடி அமீனும்
இதயத்தில்
இடம் பிடித்துவிடுக்கின்றார்கள்
இருக்கும்பொழது
இல்லத்தாரிடம்
எல்லோரிடமும்
வெறுப்பை
காட்டாதீர்கள்,அது
நம் இறப்பிறகு பின்னும்
கனலை கக்கும்

நினைவு என்பது
தீச்சுவலைப் போன்றது
அதை
அணைப்பது என்பது
அவ்வளவு எளிதல்ல

வேதனையைச் சுமந்து
குடும்பத்தைப் பிரிந்து
குதூகலத்தை மறந்து
அகவை தொலைத்து
அயல் மண்ணில் வாழும்
ஊழியர்களின்
உறவுகள் எல்லாம்
நினைவுகள் தான்

ஆம்
நீங்காத
நினைவுகள்
இதயத்தில்
இருக்கும் வரை
தொலைவுகள் எல்லாம்
தொடும் தூரத்தில் தான்





























Tuesday, April 1, 2008

நேரம்


நேரத்தை திட்டமிடுவதில் தான் வாழ்க்கை என்பதே அடங்கி உள்ளது.




1.வாசிக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
அது அறிவின் ஊற்று.





2.விளையாட நேரத்தை ஒதுக்குங்கள்.
அது இளமையின் இரகசியம்.






3.அன்பு செலுத்த நேரத்தை ஒதுக்குங்கள்.
அது வாழும் வாழ்க்கைக்கான வழி.






4.சிரிக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
அது உள்ளத்தின் உத்வேகத்திற்க்கான வழி.






5.சிந்திக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
அது நாளைய வாழ்க்கைக்கான வழி.





6.உழைக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
அது வெற்றிக்கான வழி.

வருவாய்,வரும்படி


தமிழின் அழகே சொற்களை எப்படி கையாளுவது என்பதில் தான் உள்ளது.அப்படி பயன்படுத்தும்போது,அது அனைவரின் பார்வையைக் கவரும்.அந்த வகையில் நாடோடி இலக்கியனின் "உஷார் காதல்...!" கவிதைக் கூறலாம். ஒருமுறை அந்த வரிகளை நினைத்துப்பார்க்கிறேன்



காதலோடு காத்திருந்தேன்
நீ வருவாய் என
வந்த உடன் கேட்டாய்
"உன் வருவாய் என்ன?"



வருவாய் என்றச்சொல் அதற்கு சாட்சி.

இந்த கவிதைப்படிக்கும்போது,புத்தக்கத்தில் படித்த ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது.

கலைஞர் அவர்கள் தி.மு.க வின் பொருளாளராக இருந்த போது நடந்த நிகழ்ச்சி.
கழகத்திற்காக நிதி திரட்ட கலைஞர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு வந்தார்.

அப்பொழுது கந்தர்வ கோட்டையிலிருக்கும் நண்பர் ஒருவர் கலைஞருக்குக் கடிதம் எழுதி தன்
ஊருக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.கலைஞரும் அழைப்பிக்கிணங்கி, கழக நிதியைப்
பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.


"கந்தர்வகோட்டைக்கு 'வரும்படி' என்னை அழைத்தார்கள். "வரும்படி" என்றால் கழகப்பொருளாளர் வராமல் இருப்பேனா? "
என்று கலைஞர் கூறியதும் கூட்டத்தில் பலத்த கை ஓசை எழுந்தது.


இங்கே வரும்படி அதற்கு சாட்சி.


தமிழை வாசிப்போம்.. தமிழை நேசிப்போம்.. தமிழையே சுவாசிப்போம்

என்றும் அன்புடன்

உங்கள் திகழ்மிளிர்

படம்

Sunday, March 30, 2008

அதிசியம்



நீ
என்
விழியில்
விழுந்த
ஒருநிமிடம்
இமைக்க மறந்தது
உண்மை.
ஆனால்
மறுநிமிடமே
நீ
என்
இதயத்தில்
இடம் பெயர்ந்தது
விந்தையுலும்
விந்தையடி பெண்ணே.







Sunday, February 24, 2008

மழலைச்செல்வம் ( சின்னம் - 2 )




சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குழந்தையும் ஒரு சின்னம் தான்,ஆம்
நாளைய தலைமுறையின் அடையாளம்.



குழந்தை
குடும்பத்தில் பிறந்தால்
குதூகலத்தின் சின்னம்.
அதுவே
மற்றோரு பெண் பெற்று எடுத்தால்
அவமானத்தின் சின்னம்.

மழலைச்செல்வங்களைப் பெற்றிட
ஆயிரம் நவீனமுறைகள் இருந்தாலும்
அம்புகள் நோக்கிப்பாய்வது
ஆண்களை அல்ல, பெண்களைத்தான்
அறிவியல் வளர்ந்தாலும்
அறியாமையும்
ஆணாதிக்கமும் இருக்கும்வரை
வேதனை எல்லாம்
பேதை பெண்களுக்குதான்.

Monday, January 28, 2008

அன்பு ( சின்னம்-1 )


சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

முத்தமும் ஒரு சின்னம் தான்,ஆம்
அன்பின் அடையாளம்.



தாய் தரும் முத்தம்
எல்லாவற்றுக்கும் அருமருந்து.

சேய் தரும் முத்தம்
பிறப்பின் மறுபயன்.

தாரம் தரும் முத்தம்
தெவிட்டாத தேனின்பம்.

காதலி தரும் முத்தம்
உற்சாகத்தின் உயிர்மருந்து.

அன்பை வெளிப்படுத்த
ஆயிரம் வழிகள் இருந்தாலும்
மனித உள்ளங்கள்
உடலின்பத்தையும்,
பொருளின்பத்தையும்
நாடுவதால்,இங்கே
விவாகங்கள்
வினாக்குறியாகி
விவாகரத்துக்கள்
விடைகளாகுகின்றன.

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை