Tuesday, December 30, 2008

நாம சொன்னா புஷ்சே ஆனாலும் கேட்டுக்கணும் ( மீள்பதிவு )

இது ஒரு நகைச்சுவை பதிவு தான் .யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இது ஒரு மீள்பதிவு. மஹிந்த ராஜபக்ஷ ஆகட்டும், புஷ் ஆகட்டும் இருக்குவரை மனித உரிமை என்பதற்கு விடிவே இல்லை.

இந்த புத்தாண்டு உலக நாடுகளில் அல்லல்கள் மறையவும், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள இடி அமீன்களிடமிருந்து மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவும் , இந்திய அரசின் இதயங்களில் ஈரம் சுரக்கவும் இறைவனை வேண்டிக்கொண்டு, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

...........................................................

தலைப்பைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறதா!!! நூறு சதவீதம் தமிழ்த்திரைப்படத்தலைப்பு தான்.
யார் யாரோ நடிக்கும்பொழது ஏன் நான் திரைக்கதை எழுதி இயக்கக்கூடாது என நினைத்தேன். உடனடியாக ஒரு தலைப்பைத்தேடி கண்டுப்பிடித்து சங்கத்தில் பதிவுச்செய்தேன்.எதற்கு என்றால் நம்ம ஆசாமிகள் உரிமை கொண்டக்கூடாது மட்டுமல்ல ஹாலிவுட் பசங்க என்னுடையது சொல்லக்கூடாது பாருங்க அதுதான்.இப்ப எல்லாம் மேலை நாட்டுப்பசங்க நம்முடைய மஞ்சள்,பாசுமதி அரிசி,யோகாசனத்தை அவங்க கண்டுப்பிடித்த மாதிரி பதிவுரிமை வாங்கிட்டு இருக்கிறார்கள்.நம்ம அரசாங்கம் தான் கோமாளி மாதிரி இருக்குது என்றால் நான் முட்டாள் ஆகி விடக்கூடாது பாருங்க அதுதான்.விளக்கம் வேண்டாம் விசியத்து வா என சொல்வது காதில் விழுகிறது. கதை கேக்கிறங்களா? அமெரிக்காரங்க எப்பொழதுமே அவங்க நினைத்த மாதிரியே செய்துட்டு இருக்கிறார்கள்.அது ஈரானாக இருந்தாலும் சரி, சதாம் உசேன் விசியம் ஆகட்டும், இல்லை ஆப்கான் போர் ஆனாலும் அவங்க சொன்னாக்கேட்டுக்கணும்.நம்ம சொன்னா யாரும் கேட்க மாட்டங்கனு தெரியும். சரி அதுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரைக்கும் ஊமையாகத்தான் இருக்கணும்.சரி என்ன தான் தீர்வு என்றால் அது திரைப்படம்தான். படம் எடுத்த மக்கள் பார்த்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அலைந்தேன். ஒரு தயாரிப்பாளாரும் கிடைத்து விட்டார் என்றால் பாருங்க.ஹீரோவா கிளிண்டன் தான் போடால் நல்லா இருக்கும் என பார்த்தால் அவரும் தேதி இல்லை, ரொம்ப பிசி என்று சொல்லி விட்டார். விசாரித்தில் அவரு படத்துக்கு விட பாப்பாகளுக்கு தான் தேதி கொடுக்கவே சரியாக இருக்கு என தெரிந்தது.அந்த வம்பு நமக்கு எதற்கு அப்பா, இப்பொழது பாப்புலரு யாருனு பார்த்த நம்ம புஷ்தான் முடிவுச்செய்திட்டு, கேட்டதுமே சரி என்று ஒத்துக்கிட்டார் என்றால் பாருங்க.எப்படியோ கதாநயாகியாக ஒரு கிராமத்து தேவதை தேர்வுச்செய்திட்டு படத்த ஆரம்பித்து விட்டேன். புஷ்சும் நல்லவே நடித்தார்,அவருக்குப்போய் நடிப்பு சொல்லித்தராணுமா!!! அவருந்தான் ஆயில் கிணறு மேலிருக்கின்ற ஆசையில் சதாம் தீவிரவாதத்திற்கு ஆதரவு தருக்கிறார் என்று ஈராக் கைப்பற்றியதுப்பொழது நடித்த நடிப்பை பார்த்தோம் என்று கூறுவது காதில் விழுகிறது. எப்படியோ படத்தை எடுத்துவிட்டேன்.ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி.படத்தை முழுவதும் இந்தியாவிலே எடுத்துவிட்டதால் நம்ம இயக்குநர்கள் போல் வெளிநாட்டை தயாரிப்பாளார் செலவில் பார்க்கணு ஆசையா இருந்தது.அந்த ஆசை நிறைவேற்று மாதிரி, நம்முட்டைய ஹீரோக்களுக்கு எப்படி ஐஸ்வர்யாவுடனோ,மல்லிகாவுடனோ ஒரு பாடலில் ஆடவில்லை என்றால் எப்படி உறக்கமே வராதோ, அதுமாதிரி நம்ம புஷ்சுவிற்கும் ஹாலிவுட் நடிகையுடன் ஆடியே ஆகணும் என்று அடம்பிடித்தால் வசதியாக போய்விட்டது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுப்போல் எனது ஆசை நிறைவேற்றிக்கொண்டேன்.படத்தை முடித்த கையுடன் வெளியிடக்காத்திருக்கிறேன்,எங்கும் சிவாஜி என்பதால் திரையரங்கு கிடைக்கவில்லை. பாடல் காட்சியை மட்டும் உங்ளுக்காக படைத்துள்ளேன்.பார்த்து மகிழவும்,இல்லை இல்லை படித்துப்பின் பார்த்து மகிழவும்.உங்களால் முடிந்தயளவு புஷ்சை ஆடச்சொல்லவும்,இல்லை என்றால் ஆட்டி வைக்கவும்,ஆம் அதுதான் நம்ம படத்தின் தலைப்பு மட்டுமல்ல விருப்பம்.நாம சொன்னா புஷ்சே ஆனாலும் கேட்டுக்கணும்.பாடலைக்காண இறுதியாகயுள்ள வார்த்தையோ,படத்தையோ அழுத்தவும்(press).


பாடலோ அல்லது எனது கருத்தோ உங்கள் உள்ளங்களை புண்ணாக்கிருந்தால் மன்னிக்கவும்





பாடலைப்பார்க்க இந்த வார்த்தை அல்லது மேலேயுள்ள படத்தை அழுத்தவும்/press செய்யக.

Tuesday, December 23, 2008

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் - குறள் சொல் விளக்கம்


இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இக்குறளுக்கு சொல் விளக்கம் காண்போம்.

இருவினை என்பதின் விளக்கம்

இருவினை என்றால் நல்வினை, தீவினை என்று சொல்லப்படும்.
அதாவது
இன்பம்-துன்பம் , நன்மை-தீமை , பிறப்பு- இறப்பு என்பதைப் போல்.

இருவினை என்பது நல்வினை , தீவினை என்றால் நல்வினை எது தீவினை எது
என்று பாகுபாடு செயவது மிகவும் கடினமாக இருக்கிறது.

எடுத்துக்காட்காக
திருட்டு திருடனுக்கு நல்லதாக தோன்றுகிறது.அதுவே பிறருக்குத் தீமையாக விளைகிறது. நாட்டுக்காக உயிர் துறப்பது நாடு என்ற அமைப்பிறகு நல்லதாக
தோன்றும், மனித உயிர்கள் மரிக்கும் கண்ணோட்டத்தில் பார்த்தால் தீயதாக
கருதப்படும். இதனைப் பார்த்தால் பிறருக்கு நன்மை விளைப்பது நல்வினை என்றும், தீமை விளைப்பது தீவினை என்றும் வரையறை கொள்ள வேண்டியுள்ளது.

புலவர் குழந்தை அவர்கள் இருவினை என்பதற்கு பெரிய துன்பம் என்று பொருள்
கொள்வார்.


சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.


என்னும் குறளை உதாரணம் காட்டி,

இறைவனின் புகழைப் பாடினால் சிறிய துன்பம் மட்டுமல்ல,பெரிய துன்பம் வராது என்று இக்குறளுக்கு விளக்கம் கூறுகிறார்.


சோம்பேறிக்குச் சோறு போடுவது நல்லதா கெட்டதா ? பசியைப் போக்குவது என்ற முறையில் நல்லது. மேலும் சோம்பேறியாக்கி நம்மை ஏமாற்ற வழிசெய்கிறது என்ற முறையில் கெட்டது.

இதனால் தான் அவற்றை இருள் என்று சொல்ல வேண்டியுள்ளது.

நீச்சல் தெரியாத ஒருவன் தவறி, கிணற்றில் விழுந்துவிட்டான். மற்றொருவன் அதனைக் காப்பாற்றுகிறான்.பிழைத்தவன் காப்பாற்றியவனைப் பாராட்டுகிறான்.நன்றியுணர்வுடன்
நடந்து கொள்கிறான். காப்பாற்றிய செயல் முடிந்துவிட்டது. அதற்காக நன்றியுணர்வு காட்டுவதால் யாரும் நன்மை ? நன்றியுணர்வு காட்டாவிட்டால் யாருக்குத் தீமை ? உதவும் குணம் என்றும் உதவும். மறக்கும் குணம் என்றும் மறக்கும்.

இதனால் தான் " இருவினையும் சேரா " என்றார்.

கடவுளை ஒருவன் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடவுள் உதவுவார். பாராட்டுதல் நன்றியுணர்வு. பாராட்டாமை நன்றியின்மை . அவ்வளவுதான்.

கண்டபடிப் தின்றால் வயிற்றுவலி உண்டாகும்.மருந்து மூலம் வலி நீங்குகிறது. இங்கே மருத்துவர் கடவுள் ஆகிறார். மருத்துவரைப் பாராட்டுவதால் நமக்கு நன்மையோ தீமையோ விளைவதில்லை.

இவற்றை இருள்சேர் இருவினை என்று ஏன் சொல்ல வேண்டும் ? இருள் என்பது புலப்படாத் தன்மை.

நன்மையா - தீமையா ? மருந்து காப்பாற்றியதா - மருந்தின் தூண்டுதலால் உடல் தேறியதா ?
எல்லாம் மயக்க நிலை. அதுவே இருள்.


புகழ் என்பதின் விளக்கம்

இருள் அதன் எதிர்ச்சொல் ஒளி ஆகும். அறை இருட்டாக இருந்தால் விளக்கு ஏற்றினால் ஒளி வந்துவிடுகிறது. இங்கே இருள் என்பது மனிதனையும் , ஒளி என்பது இறைவனையும் குறிக்கும். இறைவனின் அடியை அல்லது புகழைப் வாழ்க்கையில் நம்முடைய இருள் போன்ற துன்பங்கள் விலகும்.


புரி என்பதின் விளக்கம்

செயல்புரி என்றால் செயலாற்று என்றும் செயலை விரும்பு என்றும் பொருள் கொள்கிறோம். அதுபோல, புகழ் , புரி என்பதற்கும் பொருள் காண வேண்டும்.

கயற்றில் இரண்டு புரிகள் உள்ளன. 3 , 4 , 5 புரிகள் உள்ள கயிறுகளும் உண்டு.
புரிகள் ஓன்றோடொன்று முறுக்கி இருப்பத போல் இறைவனை நாம் புகழால் முறுக்க வேண்டும்.

புரிநூல் அதாவது இறைவனிடமுள்ள பாச முறுக்கு உடையாம இருக்க இறைவனும் நாமும் சேர்ந்து நூல் கயிறாக மாற வேண்டும். அதுதான் புரிதல் ஆகும். புகழ் என்பது இங்கு முறுக்குதலாக உருவகம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிதல் என்னும் வினையால் அறியலாம்.

மாட்டு என்பதின் விளக்கம்

மாட்டு என்பது இறைவனும் நாமும் புகழ் என்னும் முறுக்கால் மாட்டிக்கொள்வதை உணர்த்துவதை உணரமுடியும்.

பொருள் என்பதின் விளக்கம்

இறைவனுக்குப் புகழ் உண்டு. அது நிலையானது.

மனிதனுக்கும் புகழ் உண்டு . அது இறைவனை அடைவதால் உண்டாகுவது .அது பொருளை அடைவதால் வருவது

அந்த பொருள் தான் மெய்ப்பொருளாகிய இறைவன்.

( செங்கை பொதுவனின் கடவுளின் நினைவுகள் என்னும் நூலில் இருந்து )


குறள் இன்பத்தைச் சுவைக்க விரும்புவர்
இந்த வலைப்பக்கத்திற்கு செல்லவும்

திருக்குறள் - Thirukkural

படமும் பாதிப்பும் - 23/12/08

இந்த படத்திற்கு ஏற்ற கவிதை




படம் ; "கடையம் ஆனந்த்"



இந்த படத்தைப் பார்க்கும்பொழுது பல எண்ண அலைகளை என் உள்ளத்தில் விளைவித்துவிட்டது.

இதை கவிதை என்பதைவிட கிறுக்கல்கள் என்றே எனது அகம் அழைக்க விழைக்கிறது.


தீவிரவாதம் ஆகட்டும், மதத்தின் பெயராலும் மண்ணிலே மனிதர்கள் மரிப்பதைக் காணுக்கையில் கண்ணீர் வருவதும், கடவுளை வேண்டுவதும்,அவருக்கு
ஆதரவு நல்க கூடாது என்று ஒவ்வொரு முறையும் என்னை நானே சொல்லிக்கொள்வதும்
முடிவு எடுத்துக்கொள்வதும் உண்டு.


1.முதலாவது கிறுக்கல்



பாவங்கள் எல்லாம்
படமெடுக்கையில்
பாரினில் மனிதர்கள் எல்லாம்
பரிதவிக்க தான் வேண்டும்.


வறுமையின் கொடுமையை வார்த்தையால் வடிக்க முடியாது.

இது நான் படித்த பல கவிதைகளின் கலவை என்றும் பாதிப்பு என்றும் கூறமுடியும்.

இந்த வரிக்கு உரிமை ஊதியம் (Royalties) என்னால் கேட்க இயலாது.சும்மா


2.இரண்டாவது கிறுக்கல்


வாழ்க்கையில்
வறுமையை
உயர உயர
உலகிலுள்ள
உயிர்களின்
உடைகளெல்லாம்
உரியுமாம்.


வீழ்வது வெட்கமல்ல, வீழ்ந்துக்கிடப்பதுதான் வெட்கம் என்ற வைர வரிகளை மட்டுமல்ல
எழுச்சியின் எண்ணத்தையும் எடுத்து உரைக்கிறது எனக்கு இந்த புகைப்படம்


3.முன்றாவது கிறுக்கல்



எழுந்துப் பார்
ஏமாற்றங்களுக்கு மட்டுமல்ல
ஏளனங்களும் உன்
எதிர்வர அஞ்சும்.
எதிரிகளும் உன்
காலடியில்
கண்ணீர் விட்டு
கரைய கூடும்.


இலங்கை என்ற சொல்லை இயம்ப பொழுதே இதயத்தில் இன்னலை வரச்செய்கிறது
ஈழம் என்கின்ற பொழுது ஈரம் சுரக்காத இதயங்கள் இந்தியாவில் மட்டுமல்ல,
அன்னைப்பூமியில் அவதாரம் எடுத்து அலைவதும், கட்சிக்கு காவடி எடுத்துக்கொண்டு இருக்கும் கயவர்களை காணும்பொழுது கண்ணீர் தான் வருகிறது.
கடவுளே உன்னை மனம் உருகி வேண்டுவது இது தான்,
அவர்கள் அன்னையின் மடியில் பிறக்கவும் வேண்டாம்.
தமிழர் என்று எண்ணிக்கையில் கூட்டவும் வேண்டாம்



4.நான்காவது கிறுக்கல்



அகதியாய்
அனாதையாய்
அன்னைப்பூமியே, உன் முன்னே
ஆதரவுற்று நிற்கிறேன்.
அவ்வப் பொழுது, நீயும்
அலையாய் அலையாய்
ஆர்பரித்து எழுகின்றாய்.நானும்
அக மகிழ்வதுண்டு. நீயோ
அலை அடித்து பின்
அமைதி ஆகிவிடுகிறாய்.இதுவோ
அடிக்கடி நிகழ்வுண்டு
அதைக் கண்டு
ஆறுதல் தான் அடையமுடிகிறது
அல்லலை
அகற்ற யாருமில்லை.
ஆதரவுக்கர நீட்டவும்
ஆளும் இல்லை
துன்பம் மட்டும்
தொடர்க்கதையாய்
தொடர்வதுண்டு எங்களுக்கு
துயரை துடைக்க தான்
தமிழரும் யாருமில்லை,
தலைவர்களும் யாருமில்லை
தரணியிலே
குண்டுமழையில்
குற்றுயிராய் கிடைக்கிறேன்
குடல் வற்றி
பசியால் பரிதவிக்கிறேன்
பார்ப்பதற்கு யாருமில்லை
பாதுகாக்கும் யாருமில்லை
புல் பூண்டு கூட முளைக்க முடியாமல்
பாலைவனமாய் போகிறது, இந்த
பூமி பகைவர்களால்
எப்போழுது இதை
புரிந்துக்கொள்ள போகிறாய் ?
அன்னைப்பூமியே
அலையாய்
ஆர்பரித்து போதும்
சனாமியாய் எப்போழுது எழுந்து
சீறப்போகிறாய் ? எங்களையும்
சுதந்திரக்காற்றை
சுவாசிக்க
செய்ய போகிறாய்.


சிறுவர்கள் முன்னிலைப் படுத்தி எழுதுவது தான் இந்த புகைப்படத்திற்கு
சிறப்பு மட்டுமல்ல,என்னுடைய கோபம் இந்த கிறுக்கலில் கொஞ்சம்
சீறி இருக்கிறது.



5.ஐந்தாவது கிறுக்கல்




பசிக்காக
பிழைப்புக்காக
படிப்பை மறந்தோம்.

பகைவரை வெல்ல
பல நாடுகளில்
படைகள் ஆகிறோம்.

காமத்திற்காக சில
கயவர்களுக்கு
காவு கொடுக்கப் படுகிறோம்.

பணத்திற்காக இன்னும்
பல பாவங்களுக்கு
பாசமற்ற ,
பரிவற்ற மனிதர்களால்
பலி கொடுக்கப் படுகிறோம்.

சமுதாயமே கொஞ்சம்
சீறி எழுந்து, எங்களை
சித்ரவதை சிறையிலிருந்து மீட்டிடு.

கூடுதல் இன்னும் ஒரு கிறுக்கல்

வறுமையை விரட்டுவதாகவும்
வசந்தத்தை வரவழைப்பதாகவும்
வாக்குறுதி தரும்
தலைவர்களை நம்பி,
உடையின்றி
உணவின்றி
வாழ்க்கைப்பாலைவனத்தில்
மாற்றுமழை வரும் என்று
வருடங்கள் போனால் என்ன
வயோதிகம் வரை
காத்திருப்போம்.



மனம்: இந்த படத்திற்கு ஏற்ற கவிதை ப்ளீஸ்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை