Monday, June 1, 2009

படமும் பாதிப்பும் - 01/06/2009







ஆதவனுக்கு முன்பே
அதிகாலையில்
கண் விழிப்பாய் - ‍‍உந்தன்
க‌ண்மணிக‌ளுக்காக‌...

அடுப்பு அடியில் ஆரம்பித்து
உடுப்பு அணிவித்து அனுப்பும்வரை - உந்தன்
இடுப்பு உடையும்.

இத்தனையும் முடிந்த பின்
இன்னமும் இருந்து கொண்டிருக்கும்
பணிகள் பற்பல‌...

துணி துவைப்பதிலும்
வீட்டை துடைப்பதிற்குள்
வந்துவிடும் மதியம்
வயிறும் - உந்தன்
நினைவிற்கு வரும்.

உண்ட உடன் ‍- உந்தன்
உள்ளம் உறங்குமா ?
உதிக்குமே - உந்தன்
மூளையில் வேலைகள் பற்பல‌...

காய வைப்பதிலும்
புடைப்பதிலும் - உந்தன்
பொழுது போய்
பொழுது வந்துவிடும்.

ஆயத்தம் ஆகுவாய் - உந்தன்
அடுக்களைப் பணிக்கு
அப்பனும் பிள்ளையும்
தொலைக்காட்சி பெட்டிக்குள்
தொலைந்து போய்
வட்டிலுக்கு வந்து
கட்டிலுக்குப் போவார்கள்.

இத்தனையும் முடிந்த பின்
கடமை முடித்து கண்ணயரும்
கதிரவனாய் - உந்தன்
இமை மூடி இளைப்பாறுவாய்
அன்னையே...
நாளைய கடமையைப் பற்றிய
நினைவோடு
நித்தரையில்...

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை