Thursday, December 31, 2009
சாதனை நாயகன் ...
ராஜ்குமார் அவர்களும் ,விஷ்ணுவர்த்தன் அவர்களும் கன்னட உலகில் இரு பெரும் தூண்கள் என்றால் மிகையாகாது. அவர்கள் இருவரும் இன்று நம்மிடம் இல்லை.
இருவரும் இணைந்து நடித்த ஒரே படம்.அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி.
விஷ்ணுவர்த்தன் அவர்களை அரசியலில் இழுக்க பல கட்சிகள் முயன்ற போதும்,அவர் திரைப்படங்களிலே கவனத்தைச் செலுத்தினார்.அது மட்டுமல்லது தன்னுடைய திரையுலக நண்பருக்காக அரசியல் பிரச்சாரம் செய்துள்ளார்.
கன்னடத் திரையுலகின் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்திய படம் என்றால் விஷ்ணுவர்த்தன் அவர்கள் நடித்த எஜமான படமாகும்.
முதன் முதலில் வெளிநாட்டில் படமாக்கப் பட்ட கன்னடப்படம் என்னும் பெருமையை விஷ்ணுவர்த்தன் அவர்கள் நடித்த சிங்கப்பூரல்லி ராஜா குலா படத்தைச் சாரும்.
அது மட்டுமல்ல அவரின் பல படங்கள் கன்னடத் திரையுலகிலே முதல் முறையாக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டவை.விரைவில் வெளிவர இருந்த ஆப்த ரக்ஷகா என்னும் படமும் அவரின் 200 - ஆவதாகப் படமாக அமைய இருந்தது.
மொழியுணர்வைத் தன்னுடைய படங்களில் என்றுமே காட்ட தவறியதில்லை விஷ்ணுவர்த்தன் அவர்கள்.இதற்குச் சான்றாகச் சொல்ல வேண்டுமென்றால் வானத்தைப் போல என்னும் படத்தில் விஜய்காந்த மணலைக் கொண்டு பேசும் வசனத்தை, விஷ்ணுவர்த்தன் அவர்கள் எஜமானா படத்தில் கன்னட மக்களை இணைத்துப் பேசுவதைப் பார்த்தால் புரியும்.
கன்னட மக்களின் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கும் ஒரு பாடல்.
விஷ்ணு வர்த்தன் அவர்கள் கெளரவத் தோற்றத்தில் பல படங்களில் நடித்து இருந்த போதும்,பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாடல்
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகின்றேன்.
Labels:
விஷ்ணுவர்த்தன் அவர்கள்
Sunday, December 27, 2009
குழலினிது யாழினிது - 1
சிரித்து விளையாடி யவள்
முத்தம் கொடுத்தும்
சிறுத்துப் போகிறாள்.
குத்து குத்து தாம்பளம்
விளையாடினாலும்
சிரிக்க மறுக்கிறாள்.
கையில் பப்பு கடைந்து
கிச்சு கிச்சு மூட்டினாலும்
சிரிக்க மறுக்கிறாள்.
கடைசியாய்
அவளே சொன்னாள்
மீசை குத்துப்பா
குறைத்து விடாலாமென்று
கத்திரியை எடுத்தால்
அவள் அம்மா தடுக்கிறாள்
அது ஒன்று தான் அழகு
அதுல கை வைக்காதீங்க
( படித்ததில் பிடித்தது: செஞ்சி தமிழினியன் அவர்களின் கவிதை )
முத்தம் கொடுத்தும்
சிறுத்துப் போகிறாள்.
குத்து குத்து தாம்பளம்
விளையாடினாலும்
சிரிக்க மறுக்கிறாள்.
கையில் பப்பு கடைந்து
கிச்சு கிச்சு மூட்டினாலும்
சிரிக்க மறுக்கிறாள்.
கடைசியாய்
அவளே சொன்னாள்
மீசை குத்துப்பா
குறைத்து விடாலாமென்று
கத்திரியை எடுத்தால்
அவள் அம்மா தடுக்கிறாள்
அது ஒன்று தான் அழகு
அதுல கை வைக்காதீங்க
( படித்ததில் பிடித்தது: செஞ்சி தமிழினியன் அவர்களின் கவிதை )
Labels:
கவிதை,
செஞ்சி தமிழினியன்
தூசு தட்டிய காகிதக்குப்பைகள் -2
வலையில் எப்பொழுதும்
வசமாய் மாட்டுபவை
மீன்கள் மட்டும் தான்
திமிங்கலங்கள் அல்ல.
வானத்தில் என்ன கலவரமா
வீண்மீன்கள் இல்லாமல்
வெறிச்சோடி கிடைக்கிறது.
தலைவரின் பிறந்தநாள்
தொண்டனுக்குப் பரிசாய்த்
தண்டனைக் குறைப்பு
மரங்களின் தவம்
மகிழ்ச்சியில் வானத்துத் தேவதை
மழையாய் வரம்.
தன்னம்பிக்கையற்றவரின்
தாய்மொழி
தற்கொலை
**********************
இவை அனைத்தும் என் கண் முன்னே கண்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.
Monday, December 21, 2009
தூசு தட்டிய காகிதக்குப்பைகள் -1
வியர்வை சிந்திக் கட்டிய
வீட்டில் வசதியுடன்
வாழ்கிறது சிலந்தி
சோர்ந்த பொழுதெல்லாம்
சிறகு விரிக்கச்
சொல்கிறது விசிறி
குளம் நிறைய நீர்
குருவி வந்து குடித்தது
குறைய வில்லை இன்னும்
பரந்து விரிந்த மரம்
பறந்து வந்த பறவை
போட்டது பட்டா
****************************
இவை அனைத்தும் என் கண் முன்னே கண்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.
Subscribe to:
Posts (Atom)
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்