Showing posts with label உரையாடல் கவிதைப் போட்டிக்கு. Show all posts
Showing posts with label உரையாடல் கவிதைப் போட்டிக்கு. Show all posts

Friday, January 1, 2010

கொலைப் ப‌ட்டுக் கிட‌க்கிற‌து...





கத்தியை எடுத்தாயிற்று...
க‌த்தினாலும்
காது கொடுத்துக் கேட்க‌ப் போவ‌தில்லை...

வேண்டிய‌து நெத்த‌ம்
வேத‌னை யாருக்கு வேண்டும் ?

பிணமாகுப‌வ‌னைப் ப‌ற்றிக் க‌வ‌லையில்லை
ப‌ண‌ம் வ‌ந்தால் ச‌ரி...

ச‌ந்த‌தி அழுதால் என‌க்கென்ன‌ ?
ச‌ந்தோசம் தான் முக்கிய‌ம்...

காரிய‌ம் முடிந்தாயிற்று...
காலையில் தெரிந்துவிடும்.
ஆழ‌ம் எவ்வ‌ளவென்றும்,
ஆயுத‌ம் எதுவென்றும்...

த‌ண்ணீர் வேண்டி
ம‌ண்ணைத் துளை போட்ட‌தில்
க‌ண்ணீரைக் கொட்டி
கொலைப் ப‌ட்டுக் கிட‌க்கிற‌து
பூமி...

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை