Showing posts with label வட்டத்திற்குள் பெண். Show all posts
Showing posts with label வட்டத்திற்குள் பெண். Show all posts

Sunday, April 12, 2009

வட்டத்திற்குள் பெண்





கணவன் அவன்
காலம் ஆனதும்
கன்னி அவள்
காலம் முழுவதும்
விதவை எனும்
வேடம் தரிக்க‌
வேண்டும் என்ற‌
வேதனைக்கு உள்ளாக்கி
வேடிக்கை பார்த்தது
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

காலங்காலமாய்
கல்வி என்பது
ஆணுக்கு மட்டும்
கலவிக்கு மட்டும்
பெண் என்பதும்
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

கற்பு என்பது
கன்னியருக்கே சொந்தம்.
காளையருக்கு எதற்கு
கடிவாளம் எனும்
கற்பனைகள் பிறந்தது
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

கருவிலே
குழந்தை பெண் என்றால்
கள்ளிப்பால் என்றும்,
கருக்கலைப்பு என்றும்
கருணையற்று
கொடுமைகள் புரிந்தது
எதானலே ?

வட்டத்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

எண்ணிப் பாருங்கள்
எத்தனை எத்தனை
வேதனைகளில் வெந்து
துடித்திருப்பாள்
வட்ட்த்திற்குள் பெண் என்று
வகுத்துக் கொண்ட‌
வினையாலே !!!

கட்டுப்பாடு எனும் பெயரால்
காலங்காலமாய்
கன்னியரை
காயப்படுத்திய,
களங்கப்படுத்திய‌
கருத்துகளையும்
காரியங்களையும்
களைந்து எறியுங்கள்

ஆண் என்றும்,
பெண் என்றும்
பேதம் அற்ற‌
அடிமை அற்ற‌
புது தலைமுறையை
படையுங்கள்

-----------------------------------------------

கன்னி - பெண்

-------------------------------------------------

அழைப்பு விடுத்து, அன்புச்சங்கிலியில் கோர்த்து விட்ட‌ ஷைலஜா அவர்களுக்கு அகம் நிறைந்த நன்றிகள். என் எண்ணத்தை இங்கே கிறுக்கி உள்ளேன்.

மூவரை அழைக்கவேண்டும். அதனால்
மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது.

அதிகமாக ஆழமாக சிந்தித்தால்
அகப்பட்ட அரிமாக்கள் (சிங்கங்கள்) இவர்கள்
அய்யோ என்று அலறுவது கேட்கின்றது,
அடிக்கவும் வருவது தெரிகின்றது
அதாவது அன்பால், தயது செய்து
அடியேனை மன்னிக்கவும்.

1.அன்பு நண்பர் ஜோதிபாரதி அவர்கள் ( கவிதையாலும் தமிழாலும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் )

2.அன்பு நண்பர் குடந்தைஅன்புமணி அவர்கள் ( அய்க்கூ கவிதையால் அசத்திக் கொண்டு இருப்பவர் )

3.அன்பு நண்பர் ஆதவா அவர்கள் ( கவிதை, கதை என அனைத்திலும் அகம் கவர்ந்தவர் )

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை