Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Monday, January 19, 2009

உறங்கியது போதும் , உயிர்த்தெழு




உறங்கியது போதும்
உயிர்த்தெழு, இல்லையெனில்
கதை முடிந்து
கல்லறைக்குச் சென்று
கண்ணீர் அஞ்சலி செலுத்தும்
காரியத்திற்கு போக வேண்டியிருக்கும்.

உன்னுள்
உறக்கும்
உணர்வுகளைத் தட்டி எழுப்பி
உதிரம் சிந்திடும்
உன் உறவுகளுக்கு
உரிமைக்குரல் கொடுத்திடு

உயிர் துறந்து, உன்
உறவைப் பறைச் சாற்ற வேண்டாம்.

உரத்தக் குரல் கொடுத்து,
உணர்வற்று இருக்கும்
உடன்பிறப்புகளை மட்டுமல்ல,
உறங்கிக் கொண்டு இருக்கும்,
உணராமல் உள்ள
உலகை கொஞ்சம்
உயிர்த்தெழுச் செய்

Saturday, January 3, 2009

மனிதர்களா ? இல்லை மிருங்களா ?

மரிக்கும்
மனிதர்களைக் காணும்பொழுது எல்லாம்
மறந்தும் கூட
மனிதநேயம் வருவதில்லை.


ஓயாத அலையாய
ஓலமிட்டுக் கொண்டு இருப்பார்கள்
ஒப்படைக்க வேண்டும்
பிடித்தால்
பிரபாகரனை என்று

ஆட்சியைப் பிடிக்க
ஆடிக்கொண்டு இருப்பவர்களுக்கு
அழுகையும்
அவலங்களும் தெரியப் போவதில்லை

தலைவர்களே
தயவு செய்து உங்களை
தமிழர் என்று அழைத்துக் கொள்ள வேண்டாம்
அது
தமிழுக்கும்
தமிழருக்கும்
தலைகுனிவாகும்

மதமாற்றம் போல்
வேறு மொழிக்காவது மாறிக் கொள்ளுங்கள்

வேதனையும் தீருவதில்லை
கண்ணீரும் கரையப் போவதில்லை

இவர்களைக் காணும்பொழுது எல்லாம்
மனத்திற்கு தோன்றுவது
மனிதர்களா இல்லை
மிருங்களா என்று

Tuesday, December 23, 2008

படமும் பாதிப்பும் - 23/12/08

இந்த படத்திற்கு ஏற்ற கவிதை




படம் ; "கடையம் ஆனந்த்"



இந்த படத்தைப் பார்க்கும்பொழுது பல எண்ண அலைகளை என் உள்ளத்தில் விளைவித்துவிட்டது.

இதை கவிதை என்பதைவிட கிறுக்கல்கள் என்றே எனது அகம் அழைக்க விழைக்கிறது.


தீவிரவாதம் ஆகட்டும், மதத்தின் பெயராலும் மண்ணிலே மனிதர்கள் மரிப்பதைக் காணுக்கையில் கண்ணீர் வருவதும், கடவுளை வேண்டுவதும்,அவருக்கு
ஆதரவு நல்க கூடாது என்று ஒவ்வொரு முறையும் என்னை நானே சொல்லிக்கொள்வதும்
முடிவு எடுத்துக்கொள்வதும் உண்டு.


1.முதலாவது கிறுக்கல்



பாவங்கள் எல்லாம்
படமெடுக்கையில்
பாரினில் மனிதர்கள் எல்லாம்
பரிதவிக்க தான் வேண்டும்.


வறுமையின் கொடுமையை வார்த்தையால் வடிக்க முடியாது.

இது நான் படித்த பல கவிதைகளின் கலவை என்றும் பாதிப்பு என்றும் கூறமுடியும்.

இந்த வரிக்கு உரிமை ஊதியம் (Royalties) என்னால் கேட்க இயலாது.சும்மா


2.இரண்டாவது கிறுக்கல்


வாழ்க்கையில்
வறுமையை
உயர உயர
உலகிலுள்ள
உயிர்களின்
உடைகளெல்லாம்
உரியுமாம்.


வீழ்வது வெட்கமல்ல, வீழ்ந்துக்கிடப்பதுதான் வெட்கம் என்ற வைர வரிகளை மட்டுமல்ல
எழுச்சியின் எண்ணத்தையும் எடுத்து உரைக்கிறது எனக்கு இந்த புகைப்படம்


3.முன்றாவது கிறுக்கல்



எழுந்துப் பார்
ஏமாற்றங்களுக்கு மட்டுமல்ல
ஏளனங்களும் உன்
எதிர்வர அஞ்சும்.
எதிரிகளும் உன்
காலடியில்
கண்ணீர் விட்டு
கரைய கூடும்.


இலங்கை என்ற சொல்லை இயம்ப பொழுதே இதயத்தில் இன்னலை வரச்செய்கிறது
ஈழம் என்கின்ற பொழுது ஈரம் சுரக்காத இதயங்கள் இந்தியாவில் மட்டுமல்ல,
அன்னைப்பூமியில் அவதாரம் எடுத்து அலைவதும், கட்சிக்கு காவடி எடுத்துக்கொண்டு இருக்கும் கயவர்களை காணும்பொழுது கண்ணீர் தான் வருகிறது.
கடவுளே உன்னை மனம் உருகி வேண்டுவது இது தான்,
அவர்கள் அன்னையின் மடியில் பிறக்கவும் வேண்டாம்.
தமிழர் என்று எண்ணிக்கையில் கூட்டவும் வேண்டாம்



4.நான்காவது கிறுக்கல்



அகதியாய்
அனாதையாய்
அன்னைப்பூமியே, உன் முன்னே
ஆதரவுற்று நிற்கிறேன்.
அவ்வப் பொழுது, நீயும்
அலையாய் அலையாய்
ஆர்பரித்து எழுகின்றாய்.நானும்
அக மகிழ்வதுண்டு. நீயோ
அலை அடித்து பின்
அமைதி ஆகிவிடுகிறாய்.இதுவோ
அடிக்கடி நிகழ்வுண்டு
அதைக் கண்டு
ஆறுதல் தான் அடையமுடிகிறது
அல்லலை
அகற்ற யாருமில்லை.
ஆதரவுக்கர நீட்டவும்
ஆளும் இல்லை
துன்பம் மட்டும்
தொடர்க்கதையாய்
தொடர்வதுண்டு எங்களுக்கு
துயரை துடைக்க தான்
தமிழரும் யாருமில்லை,
தலைவர்களும் யாருமில்லை
தரணியிலே
குண்டுமழையில்
குற்றுயிராய் கிடைக்கிறேன்
குடல் வற்றி
பசியால் பரிதவிக்கிறேன்
பார்ப்பதற்கு யாருமில்லை
பாதுகாக்கும் யாருமில்லை
புல் பூண்டு கூட முளைக்க முடியாமல்
பாலைவனமாய் போகிறது, இந்த
பூமி பகைவர்களால்
எப்போழுது இதை
புரிந்துக்கொள்ள போகிறாய் ?
அன்னைப்பூமியே
அலையாய்
ஆர்பரித்து போதும்
சனாமியாய் எப்போழுது எழுந்து
சீறப்போகிறாய் ? எங்களையும்
சுதந்திரக்காற்றை
சுவாசிக்க
செய்ய போகிறாய்.


சிறுவர்கள் முன்னிலைப் படுத்தி எழுதுவது தான் இந்த புகைப்படத்திற்கு
சிறப்பு மட்டுமல்ல,என்னுடைய கோபம் இந்த கிறுக்கலில் கொஞ்சம்
சீறி இருக்கிறது.



5.ஐந்தாவது கிறுக்கல்




பசிக்காக
பிழைப்புக்காக
படிப்பை மறந்தோம்.

பகைவரை வெல்ல
பல நாடுகளில்
படைகள் ஆகிறோம்.

காமத்திற்காக சில
கயவர்களுக்கு
காவு கொடுக்கப் படுகிறோம்.

பணத்திற்காக இன்னும்
பல பாவங்களுக்கு
பாசமற்ற ,
பரிவற்ற மனிதர்களால்
பலி கொடுக்கப் படுகிறோம்.

சமுதாயமே கொஞ்சம்
சீறி எழுந்து, எங்களை
சித்ரவதை சிறையிலிருந்து மீட்டிடு.

கூடுதல் இன்னும் ஒரு கிறுக்கல்

வறுமையை விரட்டுவதாகவும்
வசந்தத்தை வரவழைப்பதாகவும்
வாக்குறுதி தரும்
தலைவர்களை நம்பி,
உடையின்றி
உணவின்றி
வாழ்க்கைப்பாலைவனத்தில்
மாற்றுமழை வரும் என்று
வருடங்கள் போனால் என்ன
வயோதிகம் வரை
காத்திருப்போம்.



மனம்: இந்த படத்திற்கு ஏற்ற கவிதை ப்ளீஸ்

Wednesday, July 23, 2008

கருப்பு ஜூலை -கண்ணீர் அஞ்சலி




இறைவா ! ஏன்
இந்த சோதனை
இழந்த
இழப்புகள் தான் எத்தனை
இன்னும் தொடரவேண்டுமா?
இந்த வேதனை
என்று என்
இன மக்களுக்கு கிடைக்கும் விடுதலை


குட்டிக்குட்டி
கிராமங்கள் எல்லாம்
சுயாட்சியை அறிவித்து விட்டு
சுதந்திரக்காற்றை
சுவாசிக்கும் பொழுது, என்
இதயம் விம்முவது
இது தான்
இறைவா நீ
இருக்கின்றாயா
இல்லை
இறந்துவிட்டாயா என்று தான்

ஊடகங்களில் தான்
எத்தனை வதந்திகள்
கை,கால்,உயிர் வைத்து
எத்தனை செய்திகள்
கேட்க கேட்க
உடைந்துவிடுகிறது
உள்ளம்

வழி நடத்த தலைமை இன்றி
வழி தவறி
விடுமா ? இந்த
விடுதலை வேள்வி
இல்லை
கொடுக்கப்பட்ட,
கொல்லப்பட்ட
உயிர்களின் மதிப்புகள்
அவ்வளவு தானா?

இந்த உயிர்
இருக்கையில்
என் சொந்தங்கள்
உரிமையுடன் வாழும்
காட்சியை
கண் கொண்டு
காணாமலே
கண் மூடிவிடுவேனோ?




Sunday, April 20, 2008

இதயம் இரண்டாகிறது !!!




இல்லம் என்றதும்
இதயம்
இரண்டாகிறது !!!
இருமனங்கள்
இணையும்
திருமணத்திற்குப் பிறகு
தாய் என்றும்
தாரம் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இலங்கை என்றதும் கூட
இதயம்
இரண்டாகிறது !!!
இந்தியாவில்
இந்திராவின் மூத்த‌ மகன்
இறந்த பிறகு
இந்தியன் என்றும்,
தமிழன் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இவற்றையெல்லாம் கண்டு
இருக்கையிலே
இதயம் இயம்புவது
இதுதான்

"இன்னலைத் துடைக்க‌
இயலாமல்
இருப்பதை விட‌
இறப்பதே மேல் என்று "



(வ.வா.சங்கம் போட்டிக்காக..)


கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை