Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, November 23, 2009

எல்லாம் உன்னிட‌ம் உண்டு


கண்ணீர்க்கடலில்
தத்தளிக்கும்பொழுது எல்லாம்
கலங்கி விடாதே ...

வ‌ள்ள‌மும் உன்னிட‌ம் உண்டு
வ‌ரைப்ப‌ட‌மும் உன்னிட‌ம் உண்டு
வ‌ழிந‌ட‌த்த‌ மாலுமியாய் நீயும் உண்டு
வேறு என்ன‌ வேண்டும்
வேத‌னையைத் துடைத்திடு ...

அடைந்திடுவோம்
அக்க‌ரை ம‌ட்டும‌ல்ல‌,
எக்க‌ரையும் தான்
ஏனென்றால்
எல்லாம் உன்னிட‌ம் உண்டு.

( வார்த்தைகளாகவும் வரிகளாகவும் கிறுக்கியவை.)

Thursday, November 19, 2009

தேடல்...




அன்பை எங்கெங்கோ
தேடினேன்
அகத்தில் இருப்பதை
அறியாமல்...

உண்மையை எங்கெங்கோ
தேடினேன்
உள்ளத்துள் இருப்பதை
அறியாமல்...

அமைதியை எங்கெங்கோ
தேடினேன்
அடிமனதில் இருப்பதை
அறியாமல்...

புத்துணர்வை எங்கெங்கோ
தேடினேன்
புதைந்துகிடப்பதை
அறியாமல்...

உற்சாகத்தை எங்கெங்கோ
தேடினேன்
உணர்வில் இருப்பதை
அறியாமல்...

நிம்மதியை எங்கெங்கோ
தேடினேன்
நினைவில் இருப்பதை
அறியாமல்...

மகிழ்ச்சியை எங்கெங்கோ
தேடினேன்
மனதில் இருப்பதை
அறியாமல்...

என்னை எங்கெங்கோ
தேடினேன்
எனக்குள் இருப்பதை
அறியாமல் !!!

( படித்ததில் பிடித்தது - வாஞ்சி கோவிந்தராசன் அவர்கள் எழுதிய‌ கவிதை )

*************************************************
இன்னும் சில தேடல் தொடர்புடைய கவிதைகள்

1.கவிநயா அவர்களின் கவிதை

2. சி. கருணாகரசு அவர்களின் கவிதை

Monday, June 1, 2009

படமும் பாதிப்பும் - 01/06/2009







ஆதவனுக்கு முன்பே
அதிகாலையில்
கண் விழிப்பாய் - ‍‍உந்தன்
க‌ண்மணிக‌ளுக்காக‌...

அடுப்பு அடியில் ஆரம்பித்து
உடுப்பு அணிவித்து அனுப்பும்வரை - உந்தன்
இடுப்பு உடையும்.

இத்தனையும் முடிந்த பின்
இன்னமும் இருந்து கொண்டிருக்கும்
பணிகள் பற்பல‌...

துணி துவைப்பதிலும்
வீட்டை துடைப்பதிற்குள்
வந்துவிடும் மதியம்
வயிறும் - உந்தன்
நினைவிற்கு வரும்.

உண்ட உடன் ‍- உந்தன்
உள்ளம் உறங்குமா ?
உதிக்குமே - உந்தன்
மூளையில் வேலைகள் பற்பல‌...

காய வைப்பதிலும்
புடைப்பதிலும் - உந்தன்
பொழுது போய்
பொழுது வந்துவிடும்.

ஆயத்தம் ஆகுவாய் - உந்தன்
அடுக்களைப் பணிக்கு
அப்பனும் பிள்ளையும்
தொலைக்காட்சி பெட்டிக்குள்
தொலைந்து போய்
வட்டிலுக்கு வந்து
கட்டிலுக்குப் போவார்கள்.

இத்தனையும் முடிந்த பின்
கடமை முடித்து கண்ணயரும்
கதிரவனாய் - உந்தன்
இமை மூடி இளைப்பாறுவாய்
அன்னையே...
நாளைய கடமையைப் பற்றிய
நினைவோடு
நித்தரையில்...

Wednesday, May 27, 2009

படமும் பாதிப்பும் - 27/05/2009


படம் பார்த்து கவிதை




(Thanks - SanjaiGandhi )

கதம்ப மாலை ஆகிறது
ஞாயிறு காலை
ணவன்
தாரம்
ற்றும்
சங்கள் சேர்ந்தயுடன்.

.....................................................................................................

உண்ணும்
உறங்கும்
விடுதிகளாய் இல்லங்கள்
வார நாட்களில் ...................
ஞாயிறு வந்துவிட்டால்
வீடுகளில் எல்லாம்
விழாக்கோலம்
குடும்பத்தின
குதூகலத்தில்.......................


Saturday, May 16, 2009

படமும் பாதிப்பும் - 16/05/2009

உறவு இருந்தும் துறவு ...



(Thanks - SanjaiGandhi )

மாடு இருக்கிறது
உழவனாய் உழுது கிடக்க...
வீடு இருக்கிறது
கிழவன் நான் இருக்க...


இத்தனையும் இருந்து என்ன ? இன்னும்
எத்தனை நாள் நான் இருப்பேன் ?

இங்கே மாடும் வீடும்
என் சொந்தங்களாய் ...
எங்கே போயின
என் ம‌னித‌ப்பந்தங்கள் எல்லாம் ...

மண்ணை நேசித்தது
மாபெரும் குற்ற‌மென‌ எண்ணி
எனை விடுத்து
எங்கே சென்றாய் என் மகனே ...

தினமும்
வேர்வையில் குளித்து,
பார்வை பூத்து,
வாசலில் தவமிருகின்றேன். மகனே
வருவாய் நீ என !

பயிரை அறுவடை செய்த எனக்கு
உயிரை அறுவடை செய்யும்
கலை தெரியாததால்,
கண்ணீரில் கரைகின்றேன் ...
உறவு இருந்தும்
துறவு தான் முதுமையிலே
என உணர்கின்றேன்.

Sunday, November 30, 2008

மாய மந்திரம்



மதநூல்களை எடுத்துக்கொண்டு,
மார்க்கங்களைச் சொல்லுவதாகச் சொல்லிக்கொண்டு,
உழைக்காது
உட்கார்ந்துக் கொண்டு,
உபதேசிப்பதாக
உளறிக்கொண்டும் இருக்கும்
மனிதரிடம் ( மகான்கள் !!! ??? )
மாடமளிகையும்
மரியாதைகளும்
வந்துக் குவிகின்றன்.

மனதார
மண்டியிட்டுத் தொழுதுக்கொண்டு,
உழைத்து உழைத்து
களைத்துப் போகும்
மக்களிடம்
மண்குடிசையும்
கண்ணீரும் தான்
கடைசியில் மிஞ்சுகிறது.

Wednesday, November 26, 2008

வார்த்தை விளையாட்டு




வார்த்தை
வரம்பு மீறும்பொழுதும்,
வதைக்கும் பொழுதும்
வன்முறையாக
வடிவம் கொள்ளும், பின்
வருந்திப் பயனில்லை.

வார்த்தை என்பது ஒரு
வலி நிவாரணி
அதை அங்காடிகளில் தேடி
அலைய வேண்டாம்
அது அனைவரிடமும்
அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

விவாகங்கள் எல்லாம்
விவாகரத்துகளை நோக்கி
வீர நடை போடுகையில்
விழிகளில் வழிந்தோடும்
கண்ணீரிடம் காரணத்தைக்
கேட்டுப் பாருங்கள்
வார்த்தைகளால்
உள்ளத்தை
வருட தவறும் மனிதர்களால்
வாழ்க்கையே வெறுத்துப்போய்
உறவுகள் எல்லாம்
உடைந்துப் போகும் துயரத்தை
உரைக்கும்.

வலி குறைக்கும்
வார்த்தைகளை நவின்றால்
நண்பர்கள்
நிறைய உருவாகின்றார்கள், அதுவே
வலி கொடுக்கும்
வார்த்தைகளை விளம்பினால்
விரோதிகள்
விரைவில் உருவாகின்றார்கள்

வார்த்தை விளையாட்டில்
வித்தியாசத்தைப் பாருங்கள்
வினோதமாக இல்லை.

இயந்திர வாழ்க்கையில்
இல்லத்தாரின்
இதயங்களின் இலக்கு எல்லாம்
பணத்துக்குப் பின்னே
பயணக்கையில்
வார்த்தைத் தவத்துக்காக
வீற்றிருந்து வாடும்
பிஞ்சு நெஞ்சங்களில்
பாசமா படரும்.

வார்த்தைகளால்
வருடினால்
உறவுகள் மட்டும்
உறுதியாகுவதில்லை
வலி கூட தெரிய
வழி இல்லாமல் போகிறது.

வார்த்தை சாலங்களுக்கு
வசப்பட்டு பின்
விசனப்படும்
வாக்காளர்கள் உள்ளவரை
வானத்தைக் கூட
தொட முடிகிறது, எங்கள்
தலைவர்களுக்கு


சொல்லுக்கும்
செயலுக்கும்
சம்பந்தம் உண்டு என்பதை
சிந்திக்காத வரை
சங்கடங்கள் எல்லாம் உண்டாக தான்
செய்யும்.

இணையத்திலும்
தொலைகாட்சியிலும்
தொலைந்துப் போகும் மனிதர்களால்
வார்த்தைக்குக் கூட
பஞ்சம் வந்து விடுகிறது
பலரின் இல்லங்களில்

வார்த்தை என்பது
வரம் கொஞ்சும்
வாரித் தான் கொடுங்கள்
வாழ்க்கையும்
வளமாக்குங்கள்.

Tuesday, November 25, 2008

மாவீரர் நாள் வாழ்த்தும்---- சிவரமணி அவர்களின் கவிதையும்




தமிழன் என்றால்
வீழ்ந்தே சாவான் என்ற
வரலாற்றை மாற்றிய
வீரர்களே உங்களுக்கு எனது
வீர வணக்கங்கள்

உரிமைக்காக
உயிர் துறந்தாலும், நீங்கள் எங்கள்
உள்ளங்களில் என்று என்றும்
உறங்கும் தெய்வங்கள்

உங்களின்
கல்லறையும் கண்ணீரும்
கடமையாக
கயவரின்
கதை முடித்த வரலாற்றைச் சொல்லும்

உங்களின்
உதடுகள் மட்டுமல்ல
உள்ளமும் ஒவ்வொரு மணித்துளியும்
உச்சரித்திட்ட ஈழம்,
உருவாகும் நிச்சியம் என்னும்
உணர்வோடு
உறங்குங்கள் வீரர்களே

ஆண்டவனிடம்
அனுதினமும்
பொன்னும் பொருளும்
வேண்டி இறைஞ்சுவதில்லை
வேதனைத்தீயில் வாடும் மக்களுக்கு
விரைவில் விடியல் ஒன்று
விடிந்திடவே வேண்டுகிறது

கடமைக்காக
கல்லறையில்
கண்ணுறங்கும் வீரர்களை
காண்கையில்
கடவுளே உனக்கு
கருணையும் பிறக்காதா ?

இன்னலுறும்
இதயங்களை நோக்கையில்
இறைவா உனது
இமைகளும் திறக்காதா ?
இரக்கம் பிறக்காதா ?

அன்னியர் அகதி ஆக்கும்பொழுது
ஆத்திரம் வருகிறது
அன்னைப்பூமி ஆதரிக்க மறுக்கும்பொழுது
அழுகை வருகிறது.

கதற கதற
கற்பழிக்கப்பட்ட,
கடத்தப்பட்ட,
கொல்லப்பட்டவர்களின்
உண்மைகள் உரைக்கப்படும்பொழுது
உள்ளம் கூட உறைந்துவிடும்.ஆனால்
உலகமும் உறவும் அதைக்கேட்டு
ஊமையாய் இருப்பதாய் பார்க்கையில்
உயிரற்ற பொருளாய் என்னையும் படைத்திட்டால்
உணர்வற்று இருப்பேன் என்று
உரைக்க தான் முடிகிறது.





---------------------------------------------------------------


சிவரமணி அவர்களின் கவிதை

-------------------------------------------------------------



என்னிடம்
ஒரேயொரு துப்பாக்கி
ஒரேயொரு கைக்குண்டு
என் எதிரிக்கு எதிராய்ப்
போரைப்
பிரகடனம் செய்ய
என்னிடம்
ஒரேயொரு துப்பாக்கி
ஒரேயொரு கைக்குண்டு
எனினும் நான்
தளரவில்லை

எனது
கறைபடிந்த கரங்களின்
சாதகக் கோடுகள்
மறைந்து விட்டன்.
இங்கேயொரு
புதிய கோடு
வானிற்கும் மண்ணிற்கும்
நீளம் அளக்கவல்ல
உனக்கும் எனக்கும்
உயரம் காட்டவல்ல
இங்கேயொரு
புதிய கோடு

எனது துப்பாக்கி
பறிக்கப்படலாம்
எனது கைக்குண்டு
வெடித்துச் சிதறலாம்
ஆனால்
அந்தக் கோடு
அழிக்கப்படாது

ஆசையும் கனவும்
நிறைந்த என் இதயம்
பிளக்கப்படலாம்
ஆனால் எங்கள்
கறைபடிந்த
கரம் வரைந்த
அந்தக் கோடு
அழிக்கப்படாது
ஆனால்
எம் குழந்தைகளால்
கடத்தப்படலாம்

Tuesday, November 18, 2008

இயற்கையும் இறைவனும்




உலகில் நிதமும்
கலகம் நிகழும்
காட்சியைக் கண்டு,
கவலைக் கொண்டு,
கண்ணீர்யுற்று,
கடவுளைச் சாடுகின்றோம்.

இயற்கையைப் பார்
வாழ்க்கையைக் கற்றுத் தரும் எனும்
இறைவனின் தத்துவத்தை
இதயத்தில்
இருத்திக் கொள்ள
மறக்கவும்
மறுக்கவும் செய்கின்றோம்.

மண்ணில்
மரங்கள் எல்லாம்
மாயமானப் பின்
மழையைப் பொழியவில்லை என்று
மாயவனை
மனம் நோந்துக் கொள்வது
மடமை அன்றோ

மனித
மனங்கள் எல்லாம்
மரத்துப் போன பின், இந்த
மண்தான் என்ன செய்யும்
மயானமாக தானே
மாறச்செய்யும்

இன்பத்தையும் துன்பத்தையும்
இணைந்தே பகிர்ந்துக் கொள்ள
இருபாலரைப் படைத்து
இல்லறம் எனும்
இனிய வழியைக் காண்பித்தான்
இறைவன்

இச்சையை வாழ்க்கையின்
இலக்கு என
இட்டுக்கொண்டு,
இமைப்பொழுதும்
இன்புற்று
இருக்க மாதுவையும், மதுவையும் நாடி
இடுகாட்டில்
இடம் பிடிக்க அலைக்கின்றோம் நாம்.

காலில்
காயம் என்றால்
கண் கரைகிறது
கை விரைகிறது, இந்த
உடல் நிகழ்வே
உலகத்தின் உயிர்த்துடிப்பு என்று
உணர்வது எப்பொழுது ?

உள்ளம் என்பதை
உயிர்களின்
உள்ளே வைத்து
உருவம் கொடுத்து
உயிர் வாழ மட்டுமல்ல

துன்பம் நேர்கையில்
துயர் துடைக்கவும்
தோள் கொடுக்கவும்
துணிந்திட தான்.

இயற்கையும்
இறைவனும் ஒன்று தான்


அறிவை நம்புகிறவன்
இயற்கை நேசிப்பான்
இறைவனை நம்புகிறவன்
உயிர்களை நேசிப்பான்

மலராகட்டும்
மரமாகட்டும்
மண்ணில்
விதைப்பது தான்
விளையும் என்னும்
விதியின் வினைப்படி
மனித மனங்களில்
அன்பை விதைப்போம்
அகிலத்தை செழிக்க வைப்போம்


Tuesday, April 29, 2008

திருமணம்





இரு கண்கள் நோக்கி
இரு பெயர்கள் எழுதி
இரு கைகள் கோர்த்து
இரு உடல்கள் இணைந்து
இரு உதடுகள் நனைந்து
இருப்பது மட்டுமல்ல,

இரு இதயங்கள் பரிமாறி
இரு உள்ளங்கள் ஒன்றாகி
இருவரின்
உணர்வுகளை மதித்து
சுக துக்கங்களையும்
பிள்ளை வளர்ப்பையும்
சரிசமமாய் சுமந்து
அடுப்பங்கரையும்
பள்ளியறையும் பகிர்ந்து
தாயாய்
தந்தையாய்
தோழியாய்
தோழனாய் இருந்து
உறவாடும்
உன்னதமான
உறவுக்கு பெயர் தான் திருமணம்.




(வ.வா.சங்கம் போட்டிக்காக..)

Sunday, April 20, 2008

இதயம் இரண்டாகிறது !!!




இல்லம் என்றதும்
இதயம்
இரண்டாகிறது !!!
இருமனங்கள்
இணையும்
திருமணத்திற்குப் பிறகு
தாய் என்றும்
தாரம் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இலங்கை என்றதும் கூட
இதயம்
இரண்டாகிறது !!!
இந்தியாவில்
இந்திராவின் மூத்த‌ மகன்
இறந்த பிறகு
இந்தியன் என்றும்,
தமிழன் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இவற்றையெல்லாம் கண்டு
இருக்கையிலே
இதயம் இயம்புவது
இதுதான்

"இன்னலைத் துடைக்க‌
இயலாமல்
இருப்பதை விட‌
இறப்பதே மேல் என்று "



(வ.வா.சங்கம் போட்டிக்காக..)


Wednesday, April 16, 2008

தோல்வி ( சின்னம் - 3 )






சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.



தோல்வியும் ஒரு சின்னம் தான்.ஆம்
துவண்டுவிட்டால்
தோல்வியும் ஒரு சின்னம் தான்
துணிந்துவிட்டால்
சின்னங்கள் எல்லாம்
பின்னங்களாகும்.
வெற்றிகளே
முழு எண்(ணங்)களாகும்.

உடல் வலியை நீக்க
ஆயிரம் மருந்துகள் உண்டு.
மன வலியைப் போக்க
மார்க்கமுண்டு என்றால்,அது
நம்பிக்கையே.

நம்பிக்கையுடன்
நடைப்போடுங்கள்
நாளைய உலகம்
நம் கைகளிலே.



அன்பு

மழலைச்செல்வம்



Tuesday, April 15, 2008

நேபால்



அன்று
மன்னராட்சி
இன்று
மாவோயிஸ்டு ஆட்சி

மக்கள்
மனங்களில்
மகிழ்ச்சி பிறக்கட்டும்.

ஆயுதங்கள் அற்ற
ஆட்சிக்கவிழ்ப்பு அற்ற
அமைதியான வாழ்க்கை
அமையட்டும்.


prajavani.net

Tuesday, April 8, 2008

நினைவு நதி







நினைவு
நதியில்
நீந்தும்பொழது எல்லாம்
நாம்
நனைந்து விடுகிறோம்

மனத்தில்
மறுக்கமுடியாத
மகாத்மாவும்
மட்டுமல்ல
இரக்கமற்ற
இடி அமீனும்
இதயத்தில்
இடம் பிடித்துவிடுக்கின்றார்கள்
இருக்கும்பொழது
இல்லத்தாரிடம்
எல்லோரிடமும்
வெறுப்பை
காட்டாதீர்கள்,அது
நம் இறப்பிறகு பின்னும்
கனலை கக்கும்

நினைவு என்பது
தீச்சுவலைப் போன்றது
அதை
அணைப்பது என்பது
அவ்வளவு எளிதல்ல

வேதனையைச் சுமந்து
குடும்பத்தைப் பிரிந்து
குதூகலத்தை மறந்து
அகவை தொலைத்து
அயல் மண்ணில் வாழும்
ஊழியர்களின்
உறவுகள் எல்லாம்
நினைவுகள் தான்

ஆம்
நீங்காத
நினைவுகள்
இதயத்தில்
இருக்கும் வரை
தொலைவுகள் எல்லாம்
தொடும் தூரத்தில் தான்





























Sunday, March 30, 2008

அதிசியம்



நீ
என்
விழியில்
விழுந்த
ஒருநிமிடம்
இமைக்க மறந்தது
உண்மை.
ஆனால்
மறுநிமிடமே
நீ
என்
இதயத்தில்
இடம் பெயர்ந்தது
விந்தையுலும்
விந்தையடி பெண்ணே.







Sunday, February 24, 2008

மழலைச்செல்வம் ( சின்னம் - 2 )




சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குழந்தையும் ஒரு சின்னம் தான்,ஆம்
நாளைய தலைமுறையின் அடையாளம்.



குழந்தை
குடும்பத்தில் பிறந்தால்
குதூகலத்தின் சின்னம்.
அதுவே
மற்றோரு பெண் பெற்று எடுத்தால்
அவமானத்தின் சின்னம்.

மழலைச்செல்வங்களைப் பெற்றிட
ஆயிரம் நவீனமுறைகள் இருந்தாலும்
அம்புகள் நோக்கிப்பாய்வது
ஆண்களை அல்ல, பெண்களைத்தான்
அறிவியல் வளர்ந்தாலும்
அறியாமையும்
ஆணாதிக்கமும் இருக்கும்வரை
வேதனை எல்லாம்
பேதை பெண்களுக்குதான்.

Monday, January 28, 2008

அன்பு ( சின்னம்-1 )


சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

முத்தமும் ஒரு சின்னம் தான்,ஆம்
அன்பின் அடையாளம்.



தாய் தரும் முத்தம்
எல்லாவற்றுக்கும் அருமருந்து.

சேய் தரும் முத்தம்
பிறப்பின் மறுபயன்.

தாரம் தரும் முத்தம்
தெவிட்டாத தேனின்பம்.

காதலி தரும் முத்தம்
உற்சாகத்தின் உயிர்மருந்து.

அன்பை வெளிப்படுத்த
ஆயிரம் வழிகள் இருந்தாலும்
மனித உள்ளங்கள்
உடலின்பத்தையும்,
பொருளின்பத்தையும்
நாடுவதால்,இங்கே
விவாகங்கள்
வினாக்குறியாகி
விவாகரத்துக்கள்
விடைகளாகுகின்றன.

Monday, December 31, 2007

பூக்களில் உறங்கும் மெளனங்கள்




உன்
உறவுகள்,இங்கே
உரிமைக்காக
உணர்வுக்காகபோராடுகையில
சத்தமின்றி
சலனமின்றி
இதயங்களை
இரும்பாக்கிக்கொண்டு,
இமைகளை
மூடிக்கொண்டு,
இதழ்களை
பூட்டிக்கொண்டு
இருக்கும்
உன்
மெளனத்தின்
மர்மம்தான் என்ன?

குண்டுமழையால்
குடியிருப்புகள்
மயானங்களாகும்போதும்,
குருதியால்
குழந்தைகள்
குளிப்பாட்டப்படும்போதும்
உணர்வற்றிருக்கும்
உன்
மெளனத்தின்
அர்த்தம்தான் என்ன?

ஆம்
அமைதிப்பூங்காவான
அன்னைப்பூமியில்
அருந்தவப்புதல்வனை
கண் எதிரே
காவுக்கொடுக்கப்பட்டப்பின்
உணர்ச்சிகள் எல்லாம்
மரத்துப்போய்
மெளனங்கள்தான்
மொழியாக முடியும்.

சில சமயங்களில்
இனசகோதரன்
இரத்தம் சிந்துவதுவதைப்பார்த்து,
இனவுணர்வால்
இரங்கற் கவிதை எழுதுவதும்,
தேசபக்தியால்
இனிப்பு வழங்குவதும்
காணுகையில்
கண்ணீரால்
கரைந்துவிடுகிறேன்.

உன்
உள்ளப்பூக்களில்
உறங்கும்
மெளனங்களை
பார்க்கும்போது
இறைவனிடம்
வேண்டுவது ஒன்றே
ஒன்றுதான்
இனவுணர்வுக்கும்
இறையாண்மைக்கும்
இடையே
இருதலைக்கொள்ளி எறும்பாய்
தவிக்கும் தவிப்பு, எந்த
இனசகோதரனுக்கும்
வந்துவிடக்கூடாது
என்பதுதான்.


Wednesday, September 5, 2007

எலும்புக்கூடுகள்


கண் எதிரே
கன்னியர்
களங்கப்படுவதைக்கண்டும்,
உரிமைகள்
பறிபோவதைக்கண்டும்,
உண்மைகள்
உறங்குவதைக்கண்டும்,
உணர்வற்றிருக்கும்
மனிதர்களைக்காணும்போது
எல்லாம் தோன்றுகிறது.


இரும்பாகிப்போனது
இதயங்கள் மட்டுமல்ல,
கருணையற்றுப்போனது
கண்கள் மட்டுமல்ல,
முடமாகிப்போனது
மூளைகள் மட்டுமல்ல,
பழதாகிப்போனது
பாதங்கள் மட்டுமல்ல,
உடலைவிட்டுப்போனதும்
உயிரும்தான்.


இங்கு
நடமாடுவது எல்லாம்
நவநாகரிக மனிதர்கள் அல்ல,
நகமும் சதையும்
உயிரும் உணர்வுமற்ற
எலும்புக்கூடுகளே?


Sunday, August 26, 2007

மறுபக்கம்



மறுபக்கம் என்பது
நிலவுக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும்
மர்மங்கள்
நிறைந்தது.

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை