Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Tuesday, November 18, 2008

இயற்கையும் இறைவனும்




உலகில் நிதமும்
கலகம் நிகழும்
காட்சியைக் கண்டு,
கவலைக் கொண்டு,
கண்ணீர்யுற்று,
கடவுளைச் சாடுகின்றோம்.

இயற்கையைப் பார்
வாழ்க்கையைக் கற்றுத் தரும் எனும்
இறைவனின் தத்துவத்தை
இதயத்தில்
இருத்திக் கொள்ள
மறக்கவும்
மறுக்கவும் செய்கின்றோம்.

மண்ணில்
மரங்கள் எல்லாம்
மாயமானப் பின்
மழையைப் பொழியவில்லை என்று
மாயவனை
மனம் நோந்துக் கொள்வது
மடமை அன்றோ

மனித
மனங்கள் எல்லாம்
மரத்துப் போன பின், இந்த
மண்தான் என்ன செய்யும்
மயானமாக தானே
மாறச்செய்யும்

இன்பத்தையும் துன்பத்தையும்
இணைந்தே பகிர்ந்துக் கொள்ள
இருபாலரைப் படைத்து
இல்லறம் எனும்
இனிய வழியைக் காண்பித்தான்
இறைவன்

இச்சையை வாழ்க்கையின்
இலக்கு என
இட்டுக்கொண்டு,
இமைப்பொழுதும்
இன்புற்று
இருக்க மாதுவையும், மதுவையும் நாடி
இடுகாட்டில்
இடம் பிடிக்க அலைக்கின்றோம் நாம்.

காலில்
காயம் என்றால்
கண் கரைகிறது
கை விரைகிறது, இந்த
உடல் நிகழ்வே
உலகத்தின் உயிர்த்துடிப்பு என்று
உணர்வது எப்பொழுது ?

உள்ளம் என்பதை
உயிர்களின்
உள்ளே வைத்து
உருவம் கொடுத்து
உயிர் வாழ மட்டுமல்ல

துன்பம் நேர்கையில்
துயர் துடைக்கவும்
தோள் கொடுக்கவும்
துணிந்திட தான்.

இயற்கையும்
இறைவனும் ஒன்று தான்


அறிவை நம்புகிறவன்
இயற்கை நேசிப்பான்
இறைவனை நம்புகிறவன்
உயிர்களை நேசிப்பான்

மலராகட்டும்
மரமாகட்டும்
மண்ணில்
விதைப்பது தான்
விளையும் என்னும்
விதியின் வினைப்படி
மனித மனங்களில்
அன்பை விதைப்போம்
அகிலத்தை செழிக்க வைப்போம்


Tuesday, April 29, 2008

அன்பே சிவம்



ஆண்டவனின்
அருள் வேண்டி
ஆலயத்திற்கு
ஆயிரம் ஆயிரம்
அன்பளிப்பை
அளிக்கின்றாய்.

ஆண்டவனை
சிற்பங்களிலும்
சிலைகளிலும்
கற்களிலும்
உருவம் கொள்கிறாய்.

அவனோ
உயிருள்ள
உள்ளங்களில்
உறைந்து
உள்ளதை
உணர மறுக்கின்றாய்.

பகவானுக்கு செய்வது
புண்ணியக்கணக்காக மாறும் என்று
எண்ணிக்கொண்டு
பரிதவிக்கும் உள்ளங்களுக்கு
பரிவுக்காட்டாமல்
பாவக்கணக்கை இரட்டிப்பு
ஆக்கிக்கொண்டிருக்கிறாய்.

ஆராதனைகளிலும்
அபிஷேகங்களிலும்
ஆண்டவனின்
அனுதாபத்தை
அடைந்திட
அனுதினமும்
அலைக்கின்றாய்.

அஸ்திகளை
அள்ளிக்கொடுத்து
ஆசிரமங்களையும்
ஆபாச சாமியார்களையும்
அரவணைக்கின்றாய்.

ஆண்டவனே உருவான
அன்புள்ளங்கள் இருக்கும்
அனாதை இல்லங்களை
ஆதரிக்க மறுக்கின்றாய்.


மக்களுக்கு செய்வதே
மகேசனுக்கு செய்வது என்று
மனம் உணர
மறுக்கின்றாய்.

அன்பும்
சிவனும் வேறு அல்ல.
இரண்டும் ஒன்றே என்று
உணர்ந்திடு
அதுவே
அவனின்
மந்திரம் என்று
அறிந்திடு



(வ.வா.சங்கம் போட்டிக்காக..)

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை