Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Sunday, March 30, 2008

அதிசியம்



நீ
என்
விழியில்
விழுந்த
ஒருநிமிடம்
இமைக்க மறந்தது
உண்மை.
ஆனால்
மறுநிமிடமே
நீ
என்
இதயத்தில்
இடம் பெயர்ந்தது
விந்தையுலும்
விந்தையடி பெண்ணே.







Sunday, February 24, 2008

மழலைச்செல்வம் ( சின்னம் - 2 )




சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குழந்தையும் ஒரு சின்னம் தான்,ஆம்
நாளைய தலைமுறையின் அடையாளம்.



குழந்தை
குடும்பத்தில் பிறந்தால்
குதூகலத்தின் சின்னம்.
அதுவே
மற்றோரு பெண் பெற்று எடுத்தால்
அவமானத்தின் சின்னம்.

மழலைச்செல்வங்களைப் பெற்றிட
ஆயிரம் நவீனமுறைகள் இருந்தாலும்
அம்புகள் நோக்கிப்பாய்வது
ஆண்களை அல்ல, பெண்களைத்தான்
அறிவியல் வளர்ந்தாலும்
அறியாமையும்
ஆணாதிக்கமும் இருக்கும்வரை
வேதனை எல்லாம்
பேதை பெண்களுக்குதான்.

Wednesday, August 22, 2007

விழி அசைவில்






பெண்ணே!
அசைவதற்கு
காற்றும்,புயலும்
வேண்டும் பொழது
விஞ்ஞானத்திற்கே
விளங்கவில்லை,உந்தன்
விழியசைவில் விளையும்
விந்தைகளைக் கண்டு,


பெண்ணே!
உந்தன் பார்வை
தரிசனத்தில்
தவங்களும்
சவங்கள் ஆனதுண்டு.
சாமானியனும்
சாதனையாளன் ஆனதுண்டு.





பெண்ணே! உந்தன்
விழிகள் இருக்க
மொழிகள் எதற்கு?


உந்தன் கண் ஜாடை
ஒன்றே போதுமே
எங்கள் காளையருக்கு
மாமலையும்
மண்மேடு ஆவதற்கு.






பெண்ணே!
மலர்
மலருவதற்கே
கதிரவனின்
கடைக்கண் பார்வை
வேண்டும் பொழது


உந்தன்
கடைக்கண் பார்வையால்
உலகம் வாழ்கிறது என்றால்
உண்மை தான்,அதற்கு மனித
உள்ளங்களே சாட்சி.





பெண்ணே!
உந்தன்
கருவிழியின்
கனிமொழியால்
சலனப்படும்
மனங்கள் எல்லாம்
சாந்தி அடையும்பொழது,
தோன்றும்



சந்தோஷம் வேண்டி,
சாமி சன்னதியில்
வரிசையாய் நிற்கும்
கூட்டங்கள்
எதற்காக?



Tuesday, August 14, 2007

௨(2).பிறப்பு






உயிர்
உருவாக
ஆணும்,பெண்ணும்
வேண்டும்பொழது


மழலை என்றுடன்
மங்கையரை மட்டும்
மனம் நோகவைப்பது ஏனோ?






பிறந்தோம்.
வளர்ந்தோம்.
இறந்தோம்.
இது பிறப்பின் பயன் அல்ல.


வாழ்வது ஒருமுறை என்றாலும்
வாழ்த்தவேண்டும் நம்மை தலைமுறை
இதுவே பிறப்பின் பெருமை.


Monday, August 13, 2007

1.நிலவு ஒரு பெண்ணாகி





பால் வடியும் பருவ நிலா
அவள்
பாவை எனும் பெளர்ணமி நிலா
நிதம் நிதம்
அவள் வருவாளே கனவில் உலா



காவியங்கள் அவளை
பாடவேண்டுமே கவிமழா (மழை)
முகமோ முழுநிலா
சொல்லோ
ஒவ்வொன்றும் தேன்சுவைப்பலா
அவள் விழியிரண்டும்
கணைத்தொடுக்கும் வில்லா
இல்லை இல்லை
அன்புமழை பொழியும் அமுதநிலா



உள்ளமோ முகிலா
நடையோ வண்ணமயிலா
என்றால் ஆம்
அவள் என் உள்ளம்
கவர்ந்த பிறைநிலா

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை