skip to main |
skip to sidebar

நீ
என்
விழியில்
விழுந்த
ஒருநிமிடம்
இமைக்க மறந்தது
உண்மை.
ஆனால்
மறுநிமிடமே
நீ
என்
இதயத்தில்
இடம் பெயர்ந்தது
விந்தையுலும்
விந்தையடி பெண்ணே.
சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
குழந்தையும் ஒரு சின்னம் தான்,ஆம்
நாளைய தலைமுறையின் அடையாளம்.

குழந்தை
குடும்பத்தில் பிறந்தால்
குதூகலத்தின் சின்னம்.
அதுவே
மற்றோரு பெண் பெற்று எடுத்தால்
அவமானத்தின் சின்னம்.
மழலைச்செல்வங்களைப் பெற்றிட
ஆயிரம் நவீனமுறைகள் இருந்தாலும்
அம்புகள் நோக்கிப்பாய்வது
ஆண்களை அல்ல, பெண்களைத்தான்
அறிவியல் வளர்ந்தாலும்
அறியாமையும்
ஆணாதிக்கமும் இருக்கும்வரை
வேதனை எல்லாம்
பேதை பெண்களுக்குதான்.

பால் வடியும் பருவ நிலா
அவள்
பாவை எனும் பெளர்ணமி நிலா
நிதம் நிதம்
அவள் வருவாளே கனவில் உலா
காவியங்கள் அவளை
பாடவேண்டுமே கவிமழா (மழை)
முகமோ முழுநிலா
சொல்லோ
ஒவ்வொன்றும் தேன்சுவைப்பலா
அவள் விழியிரண்டும்
கணைத்தொடுக்கும் வில்லா
இல்லை இல்லை
அன்புமழை பொழியும் அமுதநிலா
உள்ளமோ முகிலா
நடையோ வண்ணமயிலா
என்றால் ஆம்
அவள் என் உள்ளம்
கவர்ந்த பிறைநிலா