Wednesday, July 6, 2011

காடுமலை கடந்து...



காடுமலை கடந்துவந்தோம் அய்யா - உனைக்

கண்குளிர காணவந்தோம் அய்யா - அருள்
நாடிபுகழ் பாடிவந்தோம் அய்யா - உந்தன்
இணையடியை வணங்கவந்தோம் அய்யா
(காடுமலை...)

மலையெல்லாம் குடிகொண்டாய் அய்யா - பக்தர்
மனமெல்லாம் குடிகொண்டாய் அய்யா - தங்கச்
சிலையாகி நிலைகொண்டாய் அய்யா - கடுங்
சினம்கொண்டு மலைகொண்டாய் அய்யா
(காடுமலை...)

மறைபுகழும் மால்முருகன் அய்யா - தமிழ்
மணம்கமழும் வேல்முருகன் அய்யா - நமைச்
சிறைகொண்ட திருமுருகன் அய்யா - சிவ
மந்திரத்தின் குருமுருகன் அய்யா

(காடுமலை...)

மயிலோடு வலம்வருவாய் அய்யா - உடனே
மனமிறங்கி வரம்தருவாய் அய்யா - உயிர்ப்
பயம்நீங்கி பலம்தருவாய் அய்யா - என்றும்
அன்னையாகி கரம்தருவாய் அய்யா

(காடுமலை...)


பொய்கையிலே அவதரித்தாய் அய்யா - சுடும்
பொய்களெல்லாம் அழிக்கவந்தாய் அய்யா - உயிர்
மெய்யாகி தவழ்ந்துவந்தாய் அய்யா - சொல்
செயலாகி விழித்துநின்றாய் அய்யா

(காடுமலை...)

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை