Sunday, November 30, 2008

மாய மந்திரம்



மதநூல்களை எடுத்துக்கொண்டு,
மார்க்கங்களைச் சொல்லுவதாகச் சொல்லிக்கொண்டு,
உழைக்காது
உட்கார்ந்துக் கொண்டு,
உபதேசிப்பதாக
உளறிக்கொண்டும் இருக்கும்
மனிதரிடம் ( மகான்கள் !!! ??? )
மாடமளிகையும்
மரியாதைகளும்
வந்துக் குவிகின்றன்.

மனதார
மண்டியிட்டுத் தொழுதுக்கொண்டு,
உழைத்து உழைத்து
களைத்துப் போகும்
மக்களிடம்
மண்குடிசையும்
கண்ணீரும் தான்
கடைசியில் மிஞ்சுகிறது.

Wednesday, November 26, 2008

வார்த்தை விளையாட்டு




வார்த்தை
வரம்பு மீறும்பொழுதும்,
வதைக்கும் பொழுதும்
வன்முறையாக
வடிவம் கொள்ளும், பின்
வருந்திப் பயனில்லை.

வார்த்தை என்பது ஒரு
வலி நிவாரணி
அதை அங்காடிகளில் தேடி
அலைய வேண்டாம்
அது அனைவரிடமும்
அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

விவாகங்கள் எல்லாம்
விவாகரத்துகளை நோக்கி
வீர நடை போடுகையில்
விழிகளில் வழிந்தோடும்
கண்ணீரிடம் காரணத்தைக்
கேட்டுப் பாருங்கள்
வார்த்தைகளால்
உள்ளத்தை
வருட தவறும் மனிதர்களால்
வாழ்க்கையே வெறுத்துப்போய்
உறவுகள் எல்லாம்
உடைந்துப் போகும் துயரத்தை
உரைக்கும்.

வலி குறைக்கும்
வார்த்தைகளை நவின்றால்
நண்பர்கள்
நிறைய உருவாகின்றார்கள், அதுவே
வலி கொடுக்கும்
வார்த்தைகளை விளம்பினால்
விரோதிகள்
விரைவில் உருவாகின்றார்கள்

வார்த்தை விளையாட்டில்
வித்தியாசத்தைப் பாருங்கள்
வினோதமாக இல்லை.

இயந்திர வாழ்க்கையில்
இல்லத்தாரின்
இதயங்களின் இலக்கு எல்லாம்
பணத்துக்குப் பின்னே
பயணக்கையில்
வார்த்தைத் தவத்துக்காக
வீற்றிருந்து வாடும்
பிஞ்சு நெஞ்சங்களில்
பாசமா படரும்.

வார்த்தைகளால்
வருடினால்
உறவுகள் மட்டும்
உறுதியாகுவதில்லை
வலி கூட தெரிய
வழி இல்லாமல் போகிறது.

வார்த்தை சாலங்களுக்கு
வசப்பட்டு பின்
விசனப்படும்
வாக்காளர்கள் உள்ளவரை
வானத்தைக் கூட
தொட முடிகிறது, எங்கள்
தலைவர்களுக்கு


சொல்லுக்கும்
செயலுக்கும்
சம்பந்தம் உண்டு என்பதை
சிந்திக்காத வரை
சங்கடங்கள் எல்லாம் உண்டாக தான்
செய்யும்.

இணையத்திலும்
தொலைகாட்சியிலும்
தொலைந்துப் போகும் மனிதர்களால்
வார்த்தைக்குக் கூட
பஞ்சம் வந்து விடுகிறது
பலரின் இல்லங்களில்

வார்த்தை என்பது
வரம் கொஞ்சும்
வாரித் தான் கொடுங்கள்
வாழ்க்கையும்
வளமாக்குங்கள்.

Tuesday, November 25, 2008

மாவீரர் நாள் வாழ்த்தும்---- சிவரமணி அவர்களின் கவிதையும்




தமிழன் என்றால்
வீழ்ந்தே சாவான் என்ற
வரலாற்றை மாற்றிய
வீரர்களே உங்களுக்கு எனது
வீர வணக்கங்கள்

உரிமைக்காக
உயிர் துறந்தாலும், நீங்கள் எங்கள்
உள்ளங்களில் என்று என்றும்
உறங்கும் தெய்வங்கள்

உங்களின்
கல்லறையும் கண்ணீரும்
கடமையாக
கயவரின்
கதை முடித்த வரலாற்றைச் சொல்லும்

உங்களின்
உதடுகள் மட்டுமல்ல
உள்ளமும் ஒவ்வொரு மணித்துளியும்
உச்சரித்திட்ட ஈழம்,
உருவாகும் நிச்சியம் என்னும்
உணர்வோடு
உறங்குங்கள் வீரர்களே

ஆண்டவனிடம்
அனுதினமும்
பொன்னும் பொருளும்
வேண்டி இறைஞ்சுவதில்லை
வேதனைத்தீயில் வாடும் மக்களுக்கு
விரைவில் விடியல் ஒன்று
விடிந்திடவே வேண்டுகிறது

கடமைக்காக
கல்லறையில்
கண்ணுறங்கும் வீரர்களை
காண்கையில்
கடவுளே உனக்கு
கருணையும் பிறக்காதா ?

இன்னலுறும்
இதயங்களை நோக்கையில்
இறைவா உனது
இமைகளும் திறக்காதா ?
இரக்கம் பிறக்காதா ?

அன்னியர் அகதி ஆக்கும்பொழுது
ஆத்திரம் வருகிறது
அன்னைப்பூமி ஆதரிக்க மறுக்கும்பொழுது
அழுகை வருகிறது.

கதற கதற
கற்பழிக்கப்பட்ட,
கடத்தப்பட்ட,
கொல்லப்பட்டவர்களின்
உண்மைகள் உரைக்கப்படும்பொழுது
உள்ளம் கூட உறைந்துவிடும்.ஆனால்
உலகமும் உறவும் அதைக்கேட்டு
ஊமையாய் இருப்பதாய் பார்க்கையில்
உயிரற்ற பொருளாய் என்னையும் படைத்திட்டால்
உணர்வற்று இருப்பேன் என்று
உரைக்க தான் முடிகிறது.





---------------------------------------------------------------


சிவரமணி அவர்களின் கவிதை

-------------------------------------------------------------



என்னிடம்
ஒரேயொரு துப்பாக்கி
ஒரேயொரு கைக்குண்டு
என் எதிரிக்கு எதிராய்ப்
போரைப்
பிரகடனம் செய்ய
என்னிடம்
ஒரேயொரு துப்பாக்கி
ஒரேயொரு கைக்குண்டு
எனினும் நான்
தளரவில்லை

எனது
கறைபடிந்த கரங்களின்
சாதகக் கோடுகள்
மறைந்து விட்டன்.
இங்கேயொரு
புதிய கோடு
வானிற்கும் மண்ணிற்கும்
நீளம் அளக்கவல்ல
உனக்கும் எனக்கும்
உயரம் காட்டவல்ல
இங்கேயொரு
புதிய கோடு

எனது துப்பாக்கி
பறிக்கப்படலாம்
எனது கைக்குண்டு
வெடித்துச் சிதறலாம்
ஆனால்
அந்தக் கோடு
அழிக்கப்படாது

ஆசையும் கனவும்
நிறைந்த என் இதயம்
பிளக்கப்படலாம்
ஆனால் எங்கள்
கறைபடிந்த
கரம் வரைந்த
அந்தக் கோடு
அழிக்கப்படாது
ஆனால்
எம் குழந்தைகளால்
கடத்தப்படலாம்

Tuesday, November 18, 2008

இயற்கையும் இறைவனும்




உலகில் நிதமும்
கலகம் நிகழும்
காட்சியைக் கண்டு,
கவலைக் கொண்டு,
கண்ணீர்யுற்று,
கடவுளைச் சாடுகின்றோம்.

இயற்கையைப் பார்
வாழ்க்கையைக் கற்றுத் தரும் எனும்
இறைவனின் தத்துவத்தை
இதயத்தில்
இருத்திக் கொள்ள
மறக்கவும்
மறுக்கவும் செய்கின்றோம்.

மண்ணில்
மரங்கள் எல்லாம்
மாயமானப் பின்
மழையைப் பொழியவில்லை என்று
மாயவனை
மனம் நோந்துக் கொள்வது
மடமை அன்றோ

மனித
மனங்கள் எல்லாம்
மரத்துப் போன பின், இந்த
மண்தான் என்ன செய்யும்
மயானமாக தானே
மாறச்செய்யும்

இன்பத்தையும் துன்பத்தையும்
இணைந்தே பகிர்ந்துக் கொள்ள
இருபாலரைப் படைத்து
இல்லறம் எனும்
இனிய வழியைக் காண்பித்தான்
இறைவன்

இச்சையை வாழ்க்கையின்
இலக்கு என
இட்டுக்கொண்டு,
இமைப்பொழுதும்
இன்புற்று
இருக்க மாதுவையும், மதுவையும் நாடி
இடுகாட்டில்
இடம் பிடிக்க அலைக்கின்றோம் நாம்.

காலில்
காயம் என்றால்
கண் கரைகிறது
கை விரைகிறது, இந்த
உடல் நிகழ்வே
உலகத்தின் உயிர்த்துடிப்பு என்று
உணர்வது எப்பொழுது ?

உள்ளம் என்பதை
உயிர்களின்
உள்ளே வைத்து
உருவம் கொடுத்து
உயிர் வாழ மட்டுமல்ல

துன்பம் நேர்கையில்
துயர் துடைக்கவும்
தோள் கொடுக்கவும்
துணிந்திட தான்.

இயற்கையும்
இறைவனும் ஒன்று தான்


அறிவை நம்புகிறவன்
இயற்கை நேசிப்பான்
இறைவனை நம்புகிறவன்
உயிர்களை நேசிப்பான்

மலராகட்டும்
மரமாகட்டும்
மண்ணில்
விதைப்பது தான்
விளையும் என்னும்
விதியின் வினைப்படி
மனித மனங்களில்
அன்பை விதைப்போம்
அகிலத்தை செழிக்க வைப்போம்


Monday, November 17, 2008

ஆயர்பாடி மாளிகையில்



ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ- அவன்
வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகிறான் ஆராரோ.



தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகிறான். தாய்மடியில் குழந்தை கண்ணன் எப்படி உறங்குவான் ? தாய் பாலை சுவைத்தபடியே தூங்குகிறான்.எப்படிப்பட்ட கண்ணனவன் ? மாயக்கண்ணன். கன்றின் உதாரணம் இங்கே ஏன் வந்தது ? நிகழ்கின்ற இடம் ஆயர்பாடி.


எந்த நிலையில் கண்ணன் தூங்குகிறான் ? வாய் நிறைய மண்ணை உண்டு, மண்டலத்தைக் காட்டிய பின் ஓய்வெடுத்துத் தூங்குகிறான். எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.மண்ணைத் தின்ற குழந்தை கண்ணனைக் கோபித்துக் கொண்டு தாய் யசோதா வாயைத் திறந்து காட்டும்படி கேட்கிறாள். வாயைத் திறக்கிறான் கண்ணன். அவனுடைய வாய்க்குள் பூமிப்பந்து சூழல்கிறது. தான் யார் என்பதைக் கண்ணன் விளையாட்டுப்போக்கிலேயே தன் தாய்க்கு உணர்த்திவிடுகிறான்.பிரபஞ்சமே அவனுக்குள் அடக்கம். அவன் பிரபஞ்ச சொரூபி.

அவதாரமாகிவிட்ட அவன் அடக்கமாக தான் யார் என்பதைத் தாய்க்கு உணர்த்துகிறான்.இந்த நான்கு வரிகளில் மனிதனுக்கும், பிரபஞ்ச இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு அற்புதமாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

பிரபஞ்சம், குழந்தை கண்ணனுக்குள் அடக்கம். கண்ணன் தாயின் மடியில் அடக்கம். பிரபஞ்சத்தில் மனித இயக்கமே தாய்மைக்குள் அடக்கம். கீதையில் கண்ணன் என்ன சொல்கிறான் ? பிரபஞ்ச இயக்கமே நானே இருக்கிறேன் என்கிறான்.



பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன்போல் லீலைசெய்தான் தாலேலோ - அந்த
மந்திரத்தில் அவருறங்க - அந்த
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !



கோபியருடன் கண்ணன் செய்த லீலைகள் பிரசித்தம். இதை வெறும் சம்பவமாகப் பார்த்தால்
ஆயர்பாடி கோபியருடன் கண்ணன் லீலைகள் செய்தான் என்பதோடு முடிந்துவிடும். தத்துவ விளக்கமாக இதற்குப் பொருள் சொல்லப்படுவதுண்டு. கண்ணன் பரமாத்மா. கோபியர் ஜீவாத்மாக்கள். கண்ணன் கோபியரைத் தன்னுடன் அய்க்கியப்படுத்திக் கொண்டதும் ஜீவாத்மா பரமாத்மா உறவினைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.சம்பவமாகப் பார்க்காமல் உருவகமாகப் பார்த்தால் இதற்கு ஒரு புதிய தாத்பர்யம் கிடைக்கிறது.

கோபியர் கண்ணனை நாடிச் செல்வது மட்டுமல்ல, கண்ணனே கோபியரைத் தேடிச் செல்கிறார். ஜீவாத்மா தன்னை நாடி வரவேண்டுமென்று பரமாத்மா விரும்புகிறது. ஜீவாத்மாதான் பல்வேறு பந்தங்களில் சிக்கி பரமாத்மாவை விட்டு விலகி விலகிச் செல்கிறது. ஆனால் ஜீவாத்மா பரமாத்மாவை நெருங்கும்போது என்ன நிகழ்கிறது ?



மந்திரத்தில் அவருறங்க - அந்த
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !
மண்டலமே உறங்குதம்மா ஆராரே !



ஜீவாத்மா பரமாத்மாவை நெருங்குகின்றபோது ஆனந்த மயக்கத்துக்கு உள்ளாகிறது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் நெருங்கி விடுகிறபோது உலகமே இன்ப மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.

கண்ணன் ஒரு அவதாரம். தீமைகளை அடக்க வந்த அவதாரம். தீமைகளை அடக்கியவுடன் தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறிவிட்டதாக சாந்தி அவனுக்கு ஏற்படுகிறது. காளிங்க நர்த்தனத்தின் கருத்து இதுதான்.



நாகபடம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியபின்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ



மோகம் என்பது ஆசை. யோகம் என்பது ஆசையினைக் கடந்தநிலை. கண்ணனைப் பொறுத்தவரையில் அவன் மேற்கொள்கின்ற மோகநிலைகூட ஒரு யோகநிலை ஆகிவிடுகிறது. அது எப்படி ?

கண்ணன் வெளிப்படுத்துகின்ற தோற்றம் மோகம். அவன் குறிவைக்கின்ற இலக்கு யோகம். கோபியருடன் புரிகின்ற லீலை மோகம். அதனால் அவர்கள் பெறுகின்ற நிலை யோகம். பரமாத்மா, ஜீவாத்மாக்கள் அனைத்தும் யோகநிலையை அடைய வேண்டுமென்று விரும்புகிறது. அதற்காகவே ஜீவாத்மாக்களைத் தன்பால் ஈர்க்க பரமாத்மா மோகநிலையினை மேற்கொள்கின்றது. பரமாத்மாவைப் பொறுத்தவரையில் மோகநிலை, யோகநிலை ஆகிய இரண்டும் ஒன்றேதான்.

கடமைகளை முடித்துக்கொண்டு அவன் உறங்கினாலும், அவனை மற்றவர்கள் உறங்க விடுகிறார்களா என்ன? யாரவனைத் தூங்க விட்டார் என்கிற கேள்வி அதிலிருந்துதான் எழுகிறது.



- அவன்
மோகநிலை கூட ஒரு
யோகநிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்க விட்டார் ஆராரோ !
யாரவனைத் தூங்க விட்டார் ஆராரோ !


பரமாத்மாவாகிய கண்ணன் தூங்கிவிட முடியுமா என்ன? அவனுடைய தூக்கம்கூட ஒரு மாயத் தோற்றம்தான். தூக்க நிலையில் விழித்திருப்பான்.விழித்த நிலையில் தூங்குவான்.



கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகைப் பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ !



நிசமாகவே கண்ணன் தூங்கிவிட்டால் என்ன ஆகும்? பிரபஞ்ச சக்தியான கண்ணன் செயலற்ற நிலையினை அடைந்துவிட முடியாது. பிரபஞ்ச சொரூபியான கண்ணன் செயல்படாமல் இருந்துவிட்டால், பிரபஞ்ச இயக்கமே ஸ்தம்பித்துப் போகும். கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும். ஆகவே அவனைத் தூங்க விடக் கூடாது. அதனால் அன்னையர் அனைவரும் சேர்ந்து அவனைத் துயில் எழுப்புவது அவசியமாகிறது.

அவன் துயிலெழுந்த பிறகு என்ன நடக்கும்? அவனுடைய லீலைகள் ஆரம்பமாகிவிடும். பிரபஞ்ச இயக்கம் சுறுசறுப்பு அடையும். கண்கொள்ளா அவனுடைய அழகுக் காட்சியைக் கண்டு தரிசிக்கலாம். போதையூட்டும் அவனுடைய முத்தங்களைப் பெற்று மகிழலாம்.

பாடல் முழுவதுமே கண்ணனின் உருவகம் தான்.கண்ணன் - கோபியர் உறவை வைத்து ஜீவாத்மா பரமாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.தீமைகளை அழித்து நன்மைகளை மேலோங்கச் செய்யும் அவதாரத்தின் நோக்கம் விளக்கப்படுகிறது. அதே சமயம் பகவானின் தேவை மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.இந்த உலகமே ஒரு முடிவில்லாத போர்க்களம். போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். உலகம் முற்றிலும் நன்மையானதாகவோ அல்லது தீமையானதாகவோ இருந்து விடமுடியாது.நன்மைக்கும், தீமைக்குமிடையே போராட்டம் நடந்தபடியேதான் இருக்கும். இது மனித இயல்பின் மாற்ற முடியாத தன்மை.

அதே சமயம் தீமை மேலோங்கி நன்மையை அழித்துவிட அனுமதிக்கவும் முடியாது. தீமையின் கை ஓங்குகின்ற போதெல்லாம் பகவான் அவதரித்து தீமையை வெற்றிகொண்டு நன்மையை நிலை நாட்டுகிறார். அதுதான் " சம்பவாமி யுகே யுகே. "

இது ஒருபுறமிருக்க, மனித மனதுக்குள்ளேயேகூட நன்மைக்கும், தீமைக்குமிடையே தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதில் தீமையின் சக்தி மேலாதிக்கம் பெற அனுமதித்துவிடக் கூடாது.மனதுக்குள் ஆதிக்கம் செலுத்துகின்ற தீமையைக் கட்டுப்படுத்துவதற்கு வழி என்ன? நன்மையின் வடிவாக இருக்கும் பகவானிடம் மனதைச் செலுத்துவதன் மூலம் தீமையின் ஆதிக்கத்தைக் குறைத்துவிட முடியும். அன்பின் சொரூபம் இறைவன். அவனை நெருங்குவதன் மூலம் மன அமைதி பெற்று நிம்மதியை நம்மால் அனுபவிக்க முடியும். ஜீவாத்மா பரமாத்மாவைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இதிலிருந்துதான் உதயமாகிறது.

ஒரு தத்துவதை இங்கே புரிந்துகொள்வது அவசியம். மனிதகுலத்தின் துயர் துடைக்க பகவான் தாமாகவே அவதரிக்கிறார். மனித இனத்தை உயர்த்துவதற்கு அவரே மனிதனாகவே பிறந்து, மனிதர்களின் சுகதுக்கங்கள் அனைத்திலும் பங்கு பெறுகிறார். கண்ணனுடைய அவதாரத்தில் லெளகீய இன்பங்களைக் கூட மனிதனுக்கும் கற்றுத் தருகிறார். சரீரம் எடுத்தபின் சரீரத்தின் சுகங்களைப் புறக்கணித்துவிட முடியாது. கோபியர்களுடன் கண்ணன் புரிகின்ற லீலைகளின் தாத்ப்ர்யம் இதுதான்.

சிற்றின்பம் இல்லாமல் பேரின்பம் இல்லை. சிற்றின்பத்தில் திளைக்கின்ற மனித உயிர், அதை மேல்நிலைப்படுத்துகின்றபோது அதுவே பேரின்பமாகி விடுகிறது. உலகில் மனிதனாகப் பிறந்தபிறகு மனித வாழ்க்கையின் ஆசாபாசங்களை அனுபவிக்காமல், பிறவிப் பெருங்கடலை நீந்துவது சாத்தியமில்லை.

கண்ணனாக அவதரித்து ஆயர்பாடியில் வாழ்ந்த மாயவனின் வாழ்க்கை இதைத்தான் நம்க்கு எடுத்துக் காட்டுகிறது.






ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல்
மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணனை உண்டு
மண்டலத்தை காட்டியப்பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவளுரங்க
மயக்கத்திலே இவனுரங்க
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)

நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அந்த மோகநிலைக் கூட, ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன் பொன்னழகை பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெருவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)

Tuesday, November 11, 2008

மாதங்கி அவர்களின் கவிதைகள் - 1 (நாளை பிறந்து இன்று வந்தவள் )



இந்தக்கவிதை
வாசிக்கும் பொழுது, நான்
வசிக்கும் தேசத்தின்
வாசம் தான்
வீசுகின்றது.




தீவு விரைவுச் சாலையில்



வண்டிகள்
வழுக்கிக்கொண்டு
சொல்லும்
இந்தத் தீவு விரைவுச்சாலை நெடுகிலும்
சிந்தியிருப்பவை
உதிரா இலைகளைக் கொண்ட
சாலையோர மரங்களின்
நிழல்கள் மட்டுமே





கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை