
மதநூல்களை எடுத்துக்கொண்டு,
மார்க்கங்களைச் சொல்லுவதாகச் சொல்லிக்கொண்டு,
உழைக்காது
உட்கார்ந்துக் கொண்டு,
உபதேசிப்பதாக
உளறிக்கொண்டும் இருக்கும்
மனிதரிடம் ( மகான்கள் !!! ??? )
மாடமளிகையும்
மரியாதைகளும்
வந்துக் குவிகின்றன்.
மனதார
மண்டியிட்டுத் தொழுதுக்கொண்டு,
உழைத்து உழைத்து
களைத்துப் போகும்
மக்களிடம்
மண்குடிசையும்
கண்ணீரும் தான்
கடைசியில் மிஞ்சுகிறது.