Thursday, November 26, 2009

மாவீரர் நாள்




உள்ள‌த்திலும், உண‌ர்விலும், உயிரிலும்
வாழும் தெய்வ‌ங்க‌ளுக்கு
என்னுடைய வீர‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்

***************************************

ஆயிர‌ம் இர‌வுக‌ள் கடக்கின்ற‌ன‌
ஒரு விடிய‌லுக்காய்
ஆயிர‌ம் இர‌வுக‌ள் கட‌க்கின்ற‌ன‌
உத‌ய‌ங்க‌ளின் வ‌ருகைக்காய்
க‌ரு மேக‌ங்க‌ளின் வில‌க‌லுக்காய்
ஆயிர‌ம் க‌ண்க‌ள் காத்துள்ள‌ன‌
ஒரு விடிய‌லுக்காய்

*******************************


********* சிவரமணி அவர்களின் வரிகள் ************

( மறுமொழி மறுக்கப்பட்ட இடுகை )

Monday, November 23, 2009

எல்லாம் உன்னிட‌ம் உண்டு


கண்ணீர்க்கடலில்
தத்தளிக்கும்பொழுது எல்லாம்
கலங்கி விடாதே ...

வ‌ள்ள‌மும் உன்னிட‌ம் உண்டு
வ‌ரைப்ப‌ட‌மும் உன்னிட‌ம் உண்டு
வ‌ழிந‌ட‌த்த‌ மாலுமியாய் நீயும் உண்டு
வேறு என்ன‌ வேண்டும்
வேத‌னையைத் துடைத்திடு ...

அடைந்திடுவோம்
அக்க‌ரை ம‌ட்டும‌ல்ல‌,
எக்க‌ரையும் தான்
ஏனென்றால்
எல்லாம் உன்னிட‌ம் உண்டு.

( வார்த்தைகளாகவும் வரிகளாகவும் கிறுக்கியவை.)

Thursday, November 19, 2009

தேடல்...




அன்பை எங்கெங்கோ
தேடினேன்
அகத்தில் இருப்பதை
அறியாமல்...

உண்மையை எங்கெங்கோ
தேடினேன்
உள்ளத்துள் இருப்பதை
அறியாமல்...

அமைதியை எங்கெங்கோ
தேடினேன்
அடிமனதில் இருப்பதை
அறியாமல்...

புத்துணர்வை எங்கெங்கோ
தேடினேன்
புதைந்துகிடப்பதை
அறியாமல்...

உற்சாகத்தை எங்கெங்கோ
தேடினேன்
உணர்வில் இருப்பதை
அறியாமல்...

நிம்மதியை எங்கெங்கோ
தேடினேன்
நினைவில் இருப்பதை
அறியாமல்...

மகிழ்ச்சியை எங்கெங்கோ
தேடினேன்
மனதில் இருப்பதை
அறியாமல்...

என்னை எங்கெங்கோ
தேடினேன்
எனக்குள் இருப்பதை
அறியாமல் !!!

( படித்ததில் பிடித்தது - வாஞ்சி கோவிந்தராசன் அவர்கள் எழுதிய‌ கவிதை )

*************************************************
இன்னும் சில தேடல் தொடர்புடைய கவிதைகள்

1.கவிநயா அவர்களின் கவிதை

2. சி. கருணாகரசு அவர்களின் கவிதை

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை