skip to main |
skip to sidebar

உன்
உறவுகள்,இங்கே
உரிமைக்காக
உணர்வுக்காகபோராடுகையில
சத்தமின்றி
சலனமின்றி
இதயங்களை
இரும்பாக்கிக்கொண்டு,
இமைகளை
மூடிக்கொண்டு,
இதழ்களை
பூட்டிக்கொண்டு
இருக்கும்
உன்
மெளனத்தின்
மர்மம்தான் என்ன?
குண்டுமழையால்
குடியிருப்புகள்
மயானங்களாகும்போதும்,
குருதியால்
குழந்தைகள்
குளிப்பாட்டப்படும்போதும்
உணர்வற்றிருக்கும்
உன்
மெளனத்தின்
அர்த்தம்தான் என்ன?
ஆம்
அமைதிப்பூங்காவான
அன்னைப்பூமியில்
அருந்தவப்புதல்வனை
கண் எதிரே
காவுக்கொடுக்கப்பட்டப்பின்
உணர்ச்சிகள் எல்லாம்
மரத்துப்போய்
மெளனங்கள்தான்
மொழியாக முடியும்.
சில சமயங்களில்
இனசகோதரன்
இரத்தம் சிந்துவதுவதைப்பார்த்து,
இனவுணர்வால்
இரங்கற் கவிதை எழுதுவதும்,
தேசபக்தியால்
இனிப்பு வழங்குவதும்
காணுகையில்
கண்ணீரால்
கரைந்துவிடுகிறேன்.
உன்
உள்ளப்பூக்களில்
உறங்கும்
மெளனங்களை
பார்க்கும்போது
இறைவனிடம்
வேண்டுவது ஒன்றே
ஒன்றுதான்
இனவுணர்வுக்கும்
இறையாண்மைக்கும்
இடையே
இருதலைக்கொள்ளி எறும்பாய்
தவிக்கும் தவிப்பு, எந்த
இனசகோதரனுக்கும்
வந்துவிடக்கூடாது
என்பதுதான்.
கண் எதிரே
கன்னியர்
களங்கப்படுவதைக்கண்டும்,
உரிமைகள்
பறிபோவதைக்கண்டும்,
உண்மைகள்
உறங்குவதைக்கண்டும்,
உணர்வற்றிருக்கும்
மனிதர்களைக்காணும்போது
எல்லாம் தோன்றுகிறது.
இரும்பாகிப்போனது
இதயங்கள் மட்டுமல்ல,
கருணையற்றுப்போனது
கண்கள் மட்டுமல்ல,
முடமாகிப்போனது
மூளைகள் மட்டுமல்ல,
பழதாகிப்போனது
பாதங்கள் மட்டுமல்ல,
உடலைவிட்டுப்போனதும்
உயிரும்தான்.
இங்கு
நடமாடுவது எல்லாம்
நவநாகரிக மனிதர்கள் அல்ல,
நகமும் சதையும்
உயிரும் உணர்வுமற்ற
எலும்புக்கூடுகளே?

மறுபக்கம் என்பது
நிலவுக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும்
மர்மங்கள்
நிறைந்தது.

எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

பால் வடியும் பருவ நிலா
அவள்
பாவை எனும் பெளர்ணமி நிலா
நிதம் நிதம்
அவள் வருவாளே கனவில் உலா
காவியங்கள் அவளை
பாடவேண்டுமே கவிமழா (மழை)
முகமோ முழுநிலா
சொல்லோ
ஒவ்வொன்றும் தேன்சுவைப்பலா
அவள் விழியிரண்டும்
கணைத்தொடுக்கும் வில்லா
இல்லை இல்லை
அன்புமழை பொழியும் அமுதநிலா
உள்ளமோ முகிலா
நடையோ வண்ணமயிலா
என்றால் ஆம்
அவள் என் உள்ளம்
கவர்ந்த பிறைநிலா