
பெண்ணே!
அசைவதற்கு
காற்றும்,புயலும்
வேண்டும் பொழது
விஞ்ஞானத்திற்கே
விளங்கவில்லை,உந்தன்
விழியசைவில் விளையும்
விந்தைகளைக் கண்டு,
பெண்ணே!
உந்தன் பார்வை
தரிசனத்தில்
தவங்களும்
சவங்கள் ஆனதுண்டு.
சாமானியனும்
சாதனையாளன் ஆனதுண்டு.

பெண்ணே! உந்தன்
விழிகள் இருக்க
மொழிகள் எதற்கு?
உந்தன் கண் ஜாடை
ஒன்றே போதுமே
எங்கள் காளையருக்கு
மாமலையும்
மண்மேடு ஆவதற்கு.

பெண்ணே!
மலர்
மலருவதற்கே
கதிரவனின்
கடைக்கண் பார்வை
வேண்டும் பொழது
உந்தன்
கடைக்கண் பார்வையால்
உலகம் வாழ்கிறது என்றால்
உண்மை தான்,அதற்கு மனித
உள்ளங்களே சாட்சி.

பெண்ணே!
உந்தன்
கருவிழியின்
கனிமொழியால்
சலனப்படும்
மனங்கள் எல்லாம்
சாந்தி அடையும்பொழது,
தோன்றும்
சந்தோஷம் வேண்டி,
சாமி சன்னதியில்
வரிசையாய் நிற்கும்
கூட்டங்கள்
எதற்காக?
