Saturday, January 3, 2009

மனிதர்களா ? இல்லை மிருங்களா ?

மரிக்கும்
மனிதர்களைக் காணும்பொழுது எல்லாம்
மறந்தும் கூட
மனிதநேயம் வருவதில்லை.


ஓயாத அலையாய
ஓலமிட்டுக் கொண்டு இருப்பார்கள்
ஒப்படைக்க வேண்டும்
பிடித்தால்
பிரபாகரனை என்று

ஆட்சியைப் பிடிக்க
ஆடிக்கொண்டு இருப்பவர்களுக்கு
அழுகையும்
அவலங்களும் தெரியப் போவதில்லை

தலைவர்களே
தயவு செய்து உங்களை
தமிழர் என்று அழைத்துக் கொள்ள வேண்டாம்
அது
தமிழுக்கும்
தமிழருக்கும்
தலைகுனிவாகும்

மதமாற்றம் போல்
வேறு மொழிக்காவது மாறிக் கொள்ளுங்கள்

வேதனையும் தீருவதில்லை
கண்ணீரும் கரையப் போவதில்லை

இவர்களைக் காணும்பொழுது எல்லாம்
மனத்திற்கு தோன்றுவது
மனிதர்களா இல்லை
மிருங்களா என்று

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை