Monday, January 19, 2009
உறங்கியது போதும் , உயிர்த்தெழு
உறங்கியது போதும்
உயிர்த்தெழு, இல்லையெனில்
கதை முடிந்து
கல்லறைக்குச் சென்று
கண்ணீர் அஞ்சலி செலுத்தும்
காரியத்திற்கு போக வேண்டியிருக்கும்.
உன்னுள்
உறக்கும்
உணர்வுகளைத் தட்டி எழுப்பி
உதிரம் சிந்திடும்
உன் உறவுகளுக்கு
உரிமைக்குரல் கொடுத்திடு
உயிர் துறந்து, உன்
உறவைப் பறைச் சாற்ற வேண்டாம்.
உரத்தக் குரல் கொடுத்து,
உணர்வற்று இருக்கும்
உடன்பிறப்புகளை மட்டுமல்ல,
உறங்கிக் கொண்டு இருக்கும்,
உணராமல் உள்ள
உலகை கொஞ்சம்
உயிர்த்தெழுச் செய்
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்