Wednesday, January 13, 2010
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
அடி எடுத்து வைக்கும்
ஆண்டில்
இன்னல்கள் எல்லாம் தொலையட்டும்
ஈழமக்களின் வாழ்க்கை மலரட்டும்
உலகெங்கும் அமைதி நிலவட்டும்
ஊழலற்ற சமுதாயம் அமையட்டும்
எழுதட்டும் புதுவரலாறு
ஏழ்மையும் வறுமையும் அகலட்டும்
ஒழியட்டும் வன்முறையும் கலகமும்
ஓதட்டும் தமிழரெல்லாம் தமிழ்மொழியை
ஔடதமே வாழ்வென்று இல்லாமல் ஆகட்டும்
அஃதே தமிழ்ப்புத்தாண்டின் நோக்கம் ஆகட்டும்
***************************************************
பொங்கல் வந்தது...
வீட்டை சுத்தம் செய்து
வேண்டியவை மட்டும்
உள்ளே வைத்து
வேண்டாததை வெளியே தள்ளி
அத்துணை அழுக்குகளையும்
அகற்றி வெள்ளையும் அடுத்து
அழகாவும் ஆக்கினோம்...
அதைப் போலவே ஆக்க முடியுமா
அழுக்காயும் அடர்த்தியாயும்
இருக்கின்ற மனதை... ?
முடிந்தால்
பொங்கலோ பொங்கல்... !
********************************************
பொங்கல் கவிதை ----- செல்மா காமராசன் அவர்கள்
****************************************
Saturday, January 2, 2010
தூசு தட்டிய காகிதக்குப்பைகள் -3
ச(ட்)டம்
கனிவாய்ச் சொன்னால்
ஜடமாய்த் தெரிகிறது
சேட்டை செய்யத் தோன்றுகிறது...
அதுவே
கட்டளை இட்டால்
சட்டமாய்த் தெரிகிறது
சாட்டையாகத் தோன்றுகிறது....
கனிவாய்ச் சொன்னால்
ஜடமாய்த் தெரிகிறது
சேட்டை செய்யத் தோன்றுகிறது...
அதுவே
கட்டளை இட்டால்
சட்டமாய்த் தெரிகிறது
சாட்டையாகத் தோன்றுகிறது....
மேல்முறையீடு ( Appeal )
தாயப் பலகையாய் இங்கே
நாய மன்றங்கள்
வெட்டினாலும்
ஆட்டமுண்டு
ஓட்டமுண்டு
பயந்து வீடாதீர்கள்
பாய்ந்து விடலாம்.
******************************
இவை அனைத்தும் என் கண் முன்னே கண்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.
Friday, January 1, 2010
கொலைப் பட்டுக் கிடக்கிறது...
கத்தியை எடுத்தாயிற்று...
கத்தினாலும்
காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை...
வேண்டியது நெத்தம்
வேதனை யாருக்கு வேண்டும் ?
பிணமாகுபவனைப் பற்றிக் கவலையில்லை
பணம் வந்தால் சரி...
சந்ததி அழுதால் எனக்கென்ன ?
சந்தோசம் தான் முக்கியம்...
காரியம் முடிந்தாயிற்று...
காலையில் தெரிந்துவிடும்.
ஆழம் எவ்வளவென்றும்,
ஆயுதம் எதுவென்றும்...
தண்ணீர் வேண்டி
மண்ணைத் துளை போட்டதில்
கண்ணீரைக் கொட்டி
கொலைப் பட்டுக் கிடக்கிறது
பூமி...
Labels:
உரையாடல் கவிதைப் போட்டிக்கு,
கிறுக்கல்
Subscribe to:
Posts (Atom)
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்