Friday, January 1, 2010

கொலைப் ப‌ட்டுக் கிட‌க்கிற‌து...





கத்தியை எடுத்தாயிற்று...
க‌த்தினாலும்
காது கொடுத்துக் கேட்க‌ப் போவ‌தில்லை...

வேண்டிய‌து நெத்த‌ம்
வேத‌னை யாருக்கு வேண்டும் ?

பிணமாகுப‌வ‌னைப் ப‌ற்றிக் க‌வ‌லையில்லை
ப‌ண‌ம் வ‌ந்தால் ச‌ரி...

ச‌ந்த‌தி அழுதால் என‌க்கென்ன‌ ?
ச‌ந்தோசம் தான் முக்கிய‌ம்...

காரிய‌ம் முடிந்தாயிற்று...
காலையில் தெரிந்துவிடும்.
ஆழ‌ம் எவ்வ‌ளவென்றும்,
ஆயுத‌ம் எதுவென்றும்...

த‌ண்ணீர் வேண்டி
ம‌ண்ணைத் துளை போட்ட‌தில்
க‌ண்ணீரைக் கொட்டி
கொலைப் ப‌ட்டுக் கிட‌க்கிற‌து
பூமி...

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை