Thursday, December 31, 2009

சாதனை நாயகன் ...



ராஜ்குமார் அவர்களும் ,விஷ்ணுவர்த்தன் அவர்களும் கன்னட உலகில் இரு பெரும் தூண்கள் என்றால் மிகையாகாது. அவர்கள் இருவரும் இன்று நம்மிடம் இல்லை.



இருவரும் இணைந்து நடித்த ஒரே படம்.அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி.



விஷ்ணுவர்த்தன் அவர்களை அரசியலில் இழுக்க பல கட்சிகள் முயன்ற போதும்,அவர் திரைப்படங்களிலே கவனத்தைச் செலுத்தினார்.அது மட்டுமல்லது தன்னுடைய திரையுலக நண்பருக்காக அரசியல் பிரச்சாரம் செய்துள்ளார்.



கன்னடத் திரையுலகின் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்திய படம் என்றால் விஷ்ணுவர்த்தன் அவர்கள் நடித்த எஜமான படமாகும்.




முதன் முதலில் வெளிநாட்டில் படமாக்கப் பட்ட கன்னடப்படம் என்னும் பெருமையை விஷ்ணுவர்த்தன் அவர்கள் நடித்த சிங்கப்பூரல்லி ராஜா குலா படத்தைச் சாரும்.



அது மட்டுமல்ல அவரின் பல படங்கள் கன்னடத் திரையுலகிலே முதல் முறையாக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டவை.விரைவில் வெளிவர இருந்த ஆப்த ரக்ஷகா என்னும் படமும் அவரின் 200 - ஆவதாகப் படமாக அமைய இருந்தது.



மொழியுணர்வைத் தன்னுடைய படங்களில் என்றுமே காட்ட தவறியதில்லை விஷ்ணுவர்த்தன் அவர்கள்.இதற்குச் சான்றாகச் சொல்ல வேண்டுமென்றால் வானத்தைப் போல என்னும் படத்தில் விஜய்காந்த மணலைக் கொண்டு பேசும் வசனத்தை, விஷ்ணுவர்த்தன் அவர்கள் எஜமானா படத்தில் கன்னட மக்களை இணைத்துப் பேசுவதைப் பார்த்தால் புரியும்.

கன்னட மக்களின் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கும் ஒரு பாடல்.




விஷ்ணு வர்த்தன் அவர்கள் கெளரவத் தோற்றத்தில் பல படங்களில் நடித்து இருந்த போதும்,பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாடல்



அவரின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகின்றேன்.

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை