Monday, December 21, 2009

தூசு தட்டிய காகிதக்குப்பைகள் -1



வியர்வை சிந்திக் கட்டிய‌
வீட்டில் வசதியுடன்
வாழ்கிறது சிலந்தி



சோர்ந்த பொழுதெல்லாம்
சிறகு விரிக்கச்
சொல்கிறது விசிறி



குளம் நிறைய நீர்
குருவி வந்து குடித்தது
குறைய வில்லை இன்னும்



பர‌ந்து விரிந்த மரம்
பறந்து வந்த பறவை
போட்டது பட்டா

****************************

இவை அனைத்தும் என் கண் முன்னே கண்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை