Sunday, December 27, 2009

தூசு தட்டிய காகிதக்குப்பைகள் -2




வலையில் எப்பொழுதும்
வசமாய் மாட்டுபவை
மீன்கள் மட்டும் தான்
திமிங்கலங்கள் அல்ல.



வானத்தில் என்ன கலவரமா
வீண்மீன்கள் இல்லாமல்
வெறிச்சோடி கிடைக்கிறது.



தலைவரின் பிறந்தநாள்
தொண்டனுக்குப் பரிசாய்த்
தண்டனைக் குறைப்பு



மரங்களின் தவம்
மகிழ்ச்சியில் வானத்துத் தேவதை
மழையாய் வரம்.



தன்னம்பிக்கையற்றவரின்
தாய்மொழி
தற்கொலை

**********************

இவை அனைத்தும் என் கண் முன்னே கண்ட நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை