Sunday, August 26, 2007
Wednesday, August 22, 2007
விழி அசைவில்
பெண்ணே!
அசைவதற்கு
காற்றும்,புயலும்
வேண்டும் பொழது
விஞ்ஞானத்திற்கே
விளங்கவில்லை,உந்தன்
விழியசைவில் விளையும்
விந்தைகளைக் கண்டு,
பெண்ணே!
உந்தன் பார்வை
தரிசனத்தில்
தவங்களும்
சவங்கள் ஆனதுண்டு.
சாமானியனும்
சாதனையாளன் ஆனதுண்டு.
பெண்ணே! உந்தன்
விழிகள் இருக்க
மொழிகள் எதற்கு?
உந்தன் கண் ஜாடை
ஒன்றே போதுமே
எங்கள் காளையருக்கு
மாமலையும்
மண்மேடு ஆவதற்கு.
பெண்ணே!
மலர்
மலருவதற்கே
கதிரவனின்
கடைக்கண் பார்வை
வேண்டும் பொழது
உந்தன்
கடைக்கண் பார்வையால்
உலகம் வாழ்கிறது என்றால்
உண்மை தான்,அதற்கு மனித
உள்ளங்களே சாட்சி.
பெண்ணே!
உந்தன்
கருவிழியின்
கனிமொழியால்
சலனப்படும்
மனங்கள் எல்லாம்
சாந்தி அடையும்பொழது,
தோன்றும்
சந்தோஷம் வேண்டி,
சாமி சன்னதியில்
வரிசையாய் நிற்கும்
கூட்டங்கள்
எதற்காக?
Sunday, August 19, 2007
நம்பிக்கையே வாழ்க்கை
எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
Labels:
நற்சிந்தனை
Tuesday, August 14, 2007
௨(2).பிறப்பு
Monday, August 13, 2007
1.நிலவு ஒரு பெண்ணாகி
பால் வடியும் பருவ நிலா
அவள்
பாவை எனும் பெளர்ணமி நிலா
நிதம் நிதம்
அவள் வருவாளே கனவில் உலா
காவியங்கள் அவளை
பாடவேண்டுமே கவிமழா (மழை)
முகமோ முழுநிலா
சொல்லோ
ஒவ்வொன்றும் தேன்சுவைப்பலா
அவள் விழியிரண்டும்
கணைத்தொடுக்கும் வில்லா
இல்லை இல்லை
அன்புமழை பொழியும் அமுதநிலா
உள்ளமோ முகிலா
நடையோ வண்ணமயிலா
என்றால் ஆம்
அவள் என் உள்ளம்
கவர்ந்த பிறைநிலா
Subscribe to:
Posts (Atom)
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்