
கண்ணுக்கு தெரியாதவன்
ஆண்டவன்
கண் முன்னே
காட்சி அளிக்கும்
கடவுள் என்றால்
அது
அன்னை அல்லவா

ஆண்டவனைத் தொழ
அகிலத்தில்
ஆயிரம்
ஆலயங்கள் இருந்தாலும்
அன்னையில் சிறந்த
கோவிலும் இல்லை.

அன்பைப் பொழிய
அறிவை ஊட்ட
அனைத்தும் கற்றுத் தர
ஆண்டவனின்
அவதாரமாய்
தாய் என்றும்
தாரம் என்றும்
பெண்மைக்கு தான் எத்தனை
பெருமை

அதிசியம் என்றும்
ஆண்டவன் என்றும்
அவதாரம் என்றும்
அன்னையை
அபிஷேகிக்கப்பிதை விட்டு
அன்பைப் பொழிவோம்
முதியோர் இல்லங்கள்
மூலைக்கு மூலை
முளைப்பதை
முளையிலே அழிப்போம்