Sunday, May 11, 2008
அன்னை என்னும் தெய்வம்
கண்ணுக்கு தெரியாதவன்
ஆண்டவன்
கண் முன்னே
காட்சி அளிக்கும்
கடவுள் என்றால்
அது
அன்னை அல்லவா
ஆண்டவனைத் தொழ
அகிலத்தில்
ஆயிரம்
ஆலயங்கள் இருந்தாலும்
அன்னையில் சிறந்த
கோவிலும் இல்லை.
அன்பைப் பொழிய
அறிவை ஊட்ட
அனைத்தும் கற்றுத் தர
ஆண்டவனின்
அவதாரமாய்
தாய் என்றும்
தாரம் என்றும்
பெண்மைக்கு தான் எத்தனை
பெருமை
அதிசியம் என்றும்
ஆண்டவன் என்றும்
அவதாரம் என்றும்
அன்னையை
அபிஷேகிக்கப்பிதை விட்டு
அன்பைப் பொழிவோம்
முதியோர் இல்லங்கள்
மூலைக்கு மூலை
முளைப்பதை
முளையிலே அழிப்போம்
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்