Monday, November 23, 2009
எல்லாம் உன்னிடம் உண்டு
கண்ணீர்க்கடலில்
தத்தளிக்கும்பொழுது எல்லாம்
கலங்கி விடாதே ...
வள்ளமும் உன்னிடம் உண்டு
வரைப்படமும் உன்னிடம் உண்டு
வழிநடத்த மாலுமியாய் நீயும் உண்டு
வேறு என்ன வேண்டும்
வேதனையைத் துடைத்திடு ...
அடைந்திடுவோம்
அக்கரை மட்டுமல்ல,
எக்கரையும் தான்
ஏனென்றால்
எல்லாம் உன்னிடம் உண்டு.
( வார்த்தைகளாகவும் வரிகளாகவும் கிறுக்கியவை.)
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்