சின்னம் என்றால்
அடையாளம்,முத்திரை என்று
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

தோல்வியும் ஒரு சின்னம் தான்.ஆம்
துவண்டுவிட்டால்
தோல்வியும் ஒரு சின்னம் தான்
துணிந்துவிட்டால்
சின்னங்கள் எல்லாம்
பின்னங்களாகும்.
வெற்றிகளே
முழு எண்(ணங்)களாகும்.
உடல் வலியை நீக்க
ஆயிரம் மருந்துகள் உண்டு.
மன வலியைப் போக்க
மார்க்கமுண்டு என்றால்,அது
நம்பிக்கையே.
நம்பிக்கையுடன்
நடைப்போடுங்கள்
நாளைய உலகம்
நம் கைகளிலே.
அன்பு
மழலைச்செல்வம்