Tuesday, April 8, 2008

நினைவு நதி







நினைவு
நதியில்
நீந்தும்பொழது எல்லாம்
நாம்
நனைந்து விடுகிறோம்

மனத்தில்
மறுக்கமுடியாத
மகாத்மாவும்
மட்டுமல்ல
இரக்கமற்ற
இடி அமீனும்
இதயத்தில்
இடம் பிடித்துவிடுக்கின்றார்கள்
இருக்கும்பொழது
இல்லத்தாரிடம்
எல்லோரிடமும்
வெறுப்பை
காட்டாதீர்கள்,அது
நம் இறப்பிறகு பின்னும்
கனலை கக்கும்

நினைவு என்பது
தீச்சுவலைப் போன்றது
அதை
அணைப்பது என்பது
அவ்வளவு எளிதல்ல

வேதனையைச் சுமந்து
குடும்பத்தைப் பிரிந்து
குதூகலத்தை மறந்து
அகவை தொலைத்து
அயல் மண்ணில் வாழும்
ஊழியர்களின்
உறவுகள் எல்லாம்
நினைவுகள் தான்

ஆம்
நீங்காத
நினைவுகள்
இதயத்தில்
இருக்கும் வரை
தொலைவுகள் எல்லாம்
தொடும் தூரத்தில் தான்





























கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை