Sunday, April 20, 2008

இதயம் இரண்டாகிறது !!!




இல்லம் என்றதும்
இதயம்
இரண்டாகிறது !!!
இருமனங்கள்
இணையும்
திருமணத்திற்குப் பிறகு
தாய் என்றும்
தாரம் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இலங்கை என்றதும் கூட
இதயம்
இரண்டாகிறது !!!
இந்தியாவில்
இந்திராவின் மூத்த‌ மகன்
இறந்த பிறகு
இந்தியன் என்றும்,
தமிழன் என்றும்
தவிக்கும்
தவிப்பைக் கண்டு,

இவற்றையெல்லாம் கண்டு
இருக்கையிலே
இதயம் இயம்புவது
இதுதான்

"இன்னலைத் துடைக்க‌
இயலாமல்
இருப்பதை விட‌
இறப்பதே மேல் என்று "



(வ.வா.சங்கம் போட்டிக்காக..)


கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை