Tuesday, April 29, 2008
திருமணம்
இரு கண்கள் நோக்கி
இரு பெயர்கள் எழுதி
இரு கைகள் கோர்த்து
இரு உடல்கள் இணைந்து
இரு உதடுகள் நனைந்து
இருப்பது மட்டுமல்ல,
இரு இதயங்கள் பரிமாறி
இரு உள்ளங்கள் ஒன்றாகி
இருவரின்
உணர்வுகளை மதித்து
சுக துக்கங்களையும்
பிள்ளை வளர்ப்பையும்
சரிசமமாய் சுமந்து
அடுப்பங்கரையும்
பள்ளியறையும் பகிர்ந்து
தாயாய்
தந்தையாய்
தோழியாய்
தோழனாய் இருந்து
உறவாடும்
உன்னதமான
உறவுக்கு பெயர் தான் திருமணம்.
(வ.வா.சங்கம் போட்டிக்காக..)
Labels:
கவிதை,
திருமணம்,
போட்டிக்கு
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்